கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்வர் சித்தராமையா தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் புதிதாக சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது என முதல்​வர் சித்​த​ராமையா தெரி​வித்​தார். கர்​நாட​கா​வில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆணை​யத்​தின் சார்​பில் ரூ.162 கோடி செல​வில் சாதி​வாரி மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

அதில் மக்​களின் சமூக, பொருளா​தார, கல்வி குறித்த விவரங்​கள் திரட்​டப்​பட்​டன. அந்த அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டு, அதனை ஏற்​ற​தாக அரசாணை வெளி​யிடப்​பட்​டது. அதற்கு ஒக்​கலி​கா, லிங்​கா​யத்து போன்ற சாதி​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​தால், அதன் விவரங்​கள் வெளி​யிடப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில் கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா நேற்று பெங்​களூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆணைய சட்ட பிரிவு 11 (1)ன்​படி ஒவ்​வொரு 10 ஆண்​டு​களுக்​கும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும். அதன்​படி கடந்த 2015-ம் ஆண்டு சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

அந்த கணக்​கெடுப்பு இப்​போது காலா​வ​தி​யாகி​விட்​டது. அந்த அறிக்​கைக்கு பல்​வேறு தரப்​பினரும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். பிற்​படுத்​தப்​பட்​டோர் பிரி​வில் உள்ள சில சாதி​யினர் புதி​தாக சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும் என கோரினர். அதனை ஏற்று மீண்​டும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த புதி​தாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்​கிரஸ் தேசிய‌ தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ஆகியோ​ருடன் ஆலோ​சனை நடத்​தினேன். அவர்​களின் வழி​காட்​டு​தலின்​படி சாதி​வாரி கணக்​கெடுப்பை மேற்​கொள்ள இருக்​கிறோம். எங்​களின் தரவு​களை மத்​திய அரசு ஏற்க வேண்​டும் என்​பதே கர்​நாடக அரசின் நிலைப்​பாடு. புதி​தாக இந்த கணக்​கெடுப்பை மேற்​கொள்ள 80 நாட்​கள் வரை ஆகும் என நிபுணர்​கள் கூறி​யுள்​ளனர். இவ்​வாறு சித்​த​ராமை​யா தெரி​வித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.