திருப்பதியில் அதிக விளைச்சலால் வெளிமாநில மாங்காய்களை வாங்க இயலாது: ஆட்சியர் திட்டவட்டம்

திருப்​பதி: ஆந்​தி​ரா​வில் மாம்பழ விவ​சா​யிகள் கடந்த ஆண்டை போன்​று, இந்த ஆண்​டும் நஷ்டம் அடைந்து விட கூடாது எனும் எண்ணத்​தில், முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஒரு கிலோ மாங்​காய் குறைந்​த​பட்​சம் ரூ.12க்கு விவ​சா​யிட​மிருந்து பெற வேண்​டுமென​வும், இதில் ரூ. 4 அரசு மானி​யம் வழங்​கும் எனவும் அறி​வித்​துள்​ளார். இதனை மாம்பழ விவ​சா​யிகள் மகிழ்ச்​சி​யுடன் வரவேற்​றுள்​ளனர்.

இந்​நிலை​யில், நேற்று திருப்​ப​தி​யில் மாவட்ட ஆட்​சி​யர் வெங்​கடேஸ்​வர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “திருப்​பதி மாவட்​டத்​தில் மட்​டும் இந்த ஆண்டு மொத்​தம் 14,582 ஹெக்​டேர் நிலப்​பரப்​பில் 5.5 லட்​சம் மெட்​ரிக் டன் அளவு மாம்​பழம் விளைச்​சலாகி உள்​ளது. திருப்​பதி மற்​றும் அதன் சுற்​றுப்​புறங்​களில் 8 மாம்பழ கூழ் தொழிற்​சாலைகள் உள்​ளன.

கிலோவுக்கு ரூ.12.. குறைந்த பட்​ச​மாக கிலோவுக்கு ரூ.12 வரை விவ​சா​யிகளிடம் இருந்து மாங்​காய் வாங்​கப்​படு​கிறது. இதில் ரூ.4 அரசு மானிய​மாக வழங்​கப்​படு​கிறது” என்றார். அப்​போது, தமிழக விவ​சா​யிகள் கொண்டு வந்த மாங்​காய்​கள் ஆந்​திர எல்​லைக்​குள் அனு​ம​திக்​கப்பட வில்​லை. தமிழகத்​திலிருந்து வரும் மாங்​காய்​கள் வாங்​கப்பட மாட்​டா​தா? என நிருபர் ஒரு​வர் கேள்வி எழுப்​பி​னார்.அப்​போது ஆட்​சி​யர் வெங்​கடேஸ்​வர் கூறும்​போது, “ஆம். ஒவ்​வொரு ஆண்​டும் தமிழகத்​திலிருந்து மாங்​காய்​கள் வாங்​கப்​பட்டு வந்​தன.

ஆனால் இந்த ஆண்டு ஒருங்​கிணைந்த சித்​தூர் மாவட்​டத்​திலேயே சுமார் 5.5 லட்​சம் டன் தோத்​தாபுரி மாங்​காய் உற்​பத்தி நடந்​துள்​ளது. எனவே, வெளி மாநிலங்​களில் இருந்து மாங்​காய்​களை வாங்க இயலாத சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது.

மேலும் ஆந்​திர அரசு, இந்த ஆண்டு மானி​யம் வழங்​கு​வ​தால் வெளி​மாநில மாங்​காய்​களை நம்​மால் வாங்க முடி​யாது. அந்​தந்த மாநில அரசுகள் அவர்​கள் மாநிலத்​தின் மா விவ​சா​யிகளின் நலனை கருத்​தில் கொண்டு மானி​யம்​ வழங்​கி​னால்​ இந்​த நிலை ஏற்​ப​டாது. இரு மாநில அரசுகளும்​, அதி​காரி​களு​ம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.