சென்னை: எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், கடற்கரை தாம்பரம் மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விவரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பயணிகளின் வசதிக்காக வாரநாட்களில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரெயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் […]
