தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: தமிழக மகளிர் அணி தோல்வி

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த மகளிர் பிரிவு ஆட்டம் ஒன்றில் பஞ்சாப் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் தமிழக அணி 4-8 என்ற கோல் கணக்கில் அரியானாவிடம் பணிந்தது. அரியானா அணியில் சிங்சுபாம் இபெம்ஹால், யாதவ் சோனிகா தலா 3 கோலும், சுமன் லதா, நீத்து குமாரி தலா ஒரு கோலும் அடித்தனர். தமிழகம் தரப்பில் ரசனா சுரேஷ் (2 கோல்), கிறிஸ்டி எலினா, சவுமியா கோல் திருப்பினர்.

ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் மராட்டிய அணி 7-1 என்ற கோல் கணக்கில் மணிப்பூரை துவம்சம் செய்தது. மற்றொரு ஆட்டத்தில் ஒடிசா அணி 6-3 என்ற கோல் கணக்கில் புதுச்சேரியை வீழ்த்தியது.

1 More update


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.