உ.பி. அரசு அலுவலகங்களில் ‘ஒய் பிரேக்’ – அலுவலர்கள் யோகா செய்ய அனுமதி

புதுடெல்லி: இன்று ஜூன் 21-ம் தேதி சர்​வ​தேச யோகா தினம் நாடு முழு​வதும் அனுசரிக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், மத்​திய அரசின் ஆயுஷ் அமைச்​சகத்​தின் வழி​காட்​டு​தலின்​படி, உ.பி.​யின் அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் ‘ஒய்​-பிரேக்’ எனும் பெயரில் அனை​வருக்​கும் யோகா செய்​வதற்​கான நேரம் ஒதுக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து உ.பி. அரசு வெளி​யிட்ட உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: யோகா நெறி​முறையை அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் செயல்​படுத்த வேண்​டும். இந்த முயற்சி இந்​தி​யா​வின் யோகா பாரம்​பரி​யத்தை நிலைநிறுத்​து​வது மட்​டுமல்​லாமல், யோகாவை தினசரி வழக்​கத்​தின் ஒரு பகு​தி​யாக மாற்​றும். இதன் மூலம் மன அழுத்​தமில்​லாத, ஆரோக்​கிய​மான பணிச்​சூழலை​யும் ஊக்​குவிக்​கும்.

அரசு அலு​வல​கங்​களில் யோகா நேர​மானது அன்​றாடம் 5 முதல் 10 நிமிடங்​கள் வரை நீடிக்​கும். அப்​போது, கழுத்​து, முதுகு மற்​றும் இடுப்பு போன்​றவற்றுக்கு புத்​துணர்ச்சி அளிக்​கும் வகை​யில் யோகா அமையும். ஆழ்ந்த சுவாசம் மற்​றும் நினை​வாற்​றல் பயிற்​சி​யும் இந்த ஒய்​-பிரேக்கில் அடங்​கும். இவ்​வாறு அரசு உத்​தர​வில் கூறப்​பட்​டுள்​ளது.

யோகாவை பரவலாக ஊக்​குவிக்க, மத்​திய அரசின் நமஸ்தே யோகா செயலி, ஒய்​-பிரேக் செயலி, யோகா நாட்​காட்டி மற்​றும் யோகா சொற்​களஞ்​சி​யம் ஆகிய​வற்றை அதி​கள​வில் பயன்​படுத்​த​வும் உ.பி. அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இந்த செயலிகளை அரசு அலு​வல​கங்​கள், ஊழியர்​கள் மற்​றும் பொது​மக்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் பயன்​படுத்த விழிப்​புணர்வு பிரச்​சா​ரங்​கள் நடத்​தப்பட உள்​ளன.

4075 யோகா நிகழ்ச்சி: பிரதமர் மோடி அறி​முகம் செய்த யோகா தினத்தை முன்​னிட்டு மாநில அரசும் யோகா கலாச்​சா​ரத்தை வளர்க்க நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இந்த இலக்கை அடைய, பொது யோகா நெறி​முறை, பட்​டறை​கள் மற்​றும் ஆன்​லைன் பயிற்சி வகுப்​பு​களை நடத்​தும் யோகா நிபுணர்​களை சேர்க்​க​வும் உ.பி. அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இன்று சர்​வ​தேச யோகா தினத்தை முன்​னிட்டு உ.பி. முழு​வதும் 4,075 இடங்​களில் யோகா சிறப்பு நிகழ்ச்​சிகள்​ ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.