கோஹிமா,
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“அன்று ஒரு நாள் அந்நியப் படையால் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு சோதனை வந்தது. ஆவியாக வந்தால்தான் அந்நியரைத் தடுக்க முடியும், நம் ஆலயத்தைக் காக்க முடியும் என்ற நம்பிக்கையில் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டான் முத்து மகன் குட்டி என்ற சிறுவன்.
இன்றும் கூட நம் ஆலயங்களுக்கு, சமுதாயத்திற்கு, தேசத்திற்கு சோதனை தொடர்கிறது. அந்த நிலையை மாற்றிட நாம் உயிர் கொடுக்கத் தேவையில்லை, நேரம் கொடுத்தால் போதுமானது, ஒருங்கிணைவது அவசியமானது. ஒன்றுபட்ட சக்தி சோதனைகளை வென்று விடும். உண்மை, உண்மை. இந்து முன்னணி மதுரையில் நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு சிறப்புற நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.