முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு பிஹாரில் ஓய்வூதியம் ரூ.1,100 ஆக அதிகரிப்பு

பாட்னா: ​மு​தி​யோர், மாற்​றுத் திற​னாளி​கள் உட்பட குறிப்​பிட்ட பிரி​வினருக்​கான மாதாந்​திர உதவித் தொகையை ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி பிஹார் முதல்​வர் நிதிஷ்கு​மார் அறி​வித்​துள்​ளார்.

பிஹார் மாநிலத்​தில் வரும் அக்​டோபர் அல்​லது நவம்​பர் மாதங்​களில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், கடந்த வெள்​ளிக்​கிழமை பிஹார் மாநிலத்​தில் ரூ.5,736 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார். பிரம்​மாண்​ட​மான பொதுக் கூட்​டத்​தில் அவர் பேசும்​போது, ‘‘காங்​கிரஸ் – ஆர்​ஜேடி கூட்​ட​ணி​யின் காட்​டாட்சி நடத்​தி​ய​வர்​களிடம் இருந்து மீட்​கப்​பட்​ட​தால் பிஹார் மாநிலம் வளர்ச்​சிப் பாதையை நோக்கி செல்​கிறது. முதல்​வர் நிதிஷ்கு​மார் சிறந்த பணி​களை மேற்​கொண்டு வரு​கிறார். இந்​தியா உலகின் 3-வது மிகப்​பெரிய பொருளா​தார நாடாக மாறு​வதற்கு நடை​போடு​கிறது. அதற்கு பிஹார் மாநிலத்​தின் பங்​களிப்பு மிகப்​பெரி​தாக இருக்​கும்’’ என்று பாராட்​டி​னார்.

இந்​நிலை​யில், பிஹாரில் முதி​யோர்​கள், மாற்​றுத் திற​னாளி​கள், கணவனை இழந்த பெண்​களுக்கு மாதந்​தோறும் வழங்​கப்​படும் உதவித் தொகையை ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி முதல்​வர் நிதிஷ்கு​மார் நேற்று அறி​வித்​தார். பிஹார் மாநில சமூக பாது​காப்பு ஓய்​வூ​திய திட்​டத்​தின் கீழ் இந்த உதவித் தொகை அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து முதல்​வர் நிதிஷ்கு​மார் கூறிய​தாவது: முதி​யோர்​கள், மாற்​றுத் திற​னாளி​கள், கணவனை இழந்த பெண்​களுக்கு உதவித் தொகையை உயர்த்​தி​ய​தில் நான் மிக​வும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உதவித் தொகை வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும். மாதந்​தோறும் 10-ம் தேதி பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் இந்​தத் தொகை செலுத்​தப்​படும். இதன் மூலம் மாநிலத்​தில் ஒரு கோடியே 9 லட்​சத்து 69,255 பேர் பயன்​பெறு​வார்​கள்.

முதி​யோர்​கள் இந்த சமூகத்​தின் மதிப்​புமிக்க அங்​க​மாக உள்​ளனர். அவர்​கள் கவுர​வ​மான வாழ்க்கை வாழ்​வதை உறுதி செய்​வதே எங்​கள் அரசின் முக்​கிய நோக்​கம்.இவ்​வாறு முதல்​வர் நிதிஷ்கு​மார் கூறி​யுள்​ளார்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதி திட்​டத்​தின் கீழ், கிராமத் தலை​வர்​களுக்​கான அதி​காரத்​தை​யும் பிஹார் அரசு அதி​கரித்​துள்​ளது. அதன்​படி கிராமத் தலை​வர்​கள் ரூ.10 லட்​சம் வரையி​லான திட்​டங்​களுக்கு அவர்​களே ஒப்​புதல் வழங்க அதி​காரம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இது முன்பு ரூ.5 லட்​ச​மாக இருந்​தது. தற்​போது அந்​தத் தொகை இரண்டு மடங்​காக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

பஞ்​சா​யத்து ராஜ் முறை​யின் கீழ் ஜில்லா பரிஷத் தலை​வர்​களின் அலவன்ஸ் ரூ.20 ஆயிரத்​தில் இருந்து ரூ.30 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. ஜில்லா பரிஷத் துணை தலை​வர்​களுக்கு அலவன்​ஸ் ரூ.10 ஆயிரத்​தில் இருந்து ரூ.20 ஆயிர​மாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. மற்ற நிர்​வாகி​களுக்​கு ரூ.5,000 வழங்​கப்​பட்​ட அலவன்​ஸ்​ ரூ.7,500 ஆக அதிகரிக்கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.