வருகிற 27-ந்தேதி டெல்லியில் காவிரி மேலாண்மைக் கூட்டம்

டெல்லி,

டெல்லியில் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. இது மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் ஆகும். சுப்ரீம் கோர்ட்டு தீா்ப்பின்படி அடுத்த மாதம் தமிழகத்துக்கு கா்நாடக மாநிலம் 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க வேண்டும். இருப்பினும் நீா்ப்பகிா்வு விவகாரத்தில் கா்நாடகத்துக்கும் தமிழகம் உள்ளிட்ட காவிரி தொடா்பு டைய கேரளம் மற்றும் புதுச்சேரி இடையே ஒத்த கருத்து ஏற்படாததால் தொடா்ந்து முட்டுக்கட்டை நிலவி வருகிறது.

இந்தப் பிரச்சினைகளை சரி செய்து உரிய நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்து வது காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் பொறுப்பாகும். இந்த ஆணையத்தின் தலைவராக எஸ்.கே.ஹல்தாா் உள்ளாா். இவரது தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகம், கா்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் தலைமைச் செயலா்கள் அல்லது நீா்வளத் துறைச் செயலா்கள் வழக்கமாக கலந்து கொள்வாா்கள்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.