நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரில் தேசிய தேர்வு நிறுவனம் (NTA) அதிகாரிகளுடன் கைகோர்த்து இந்த மோசடியில் அவர்கள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ. 90 லட்சம் பெற்றதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், […]
