தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 8-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

தமிழக அணி தரப்பில் முத்துசெல்வன் 4 கோலும், கேப்டன் ஆடம் சின்கிளைர், சுதர்சன், ரமேஷ், வினோத் குமார் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு காலிறுதியில் ஒடிசா அணி 6-2 என்ற கோல் ஆந்திராவை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

மகளிர் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தியது. பஞ்சாப் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை தோற்கடித்தது. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் கர்நாடகா, இமாசலபிரதேசம், கேரளா, மராட்டியமும், ‘பி’ பிரிவில் பஞ்சாப், ஒடிசா, அரியானா, தமிழ்நாடும் முறையே முதல் 4 இடங்களுடன் காலிறுதிக்குள் நுழைந்தன.

இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு காலிறுதி ஆட்டங்களில் மராட்டியம்-கர்நாடகம் (காலை 10 மணி), அரியானா-சண்டிகார் (பகல் 12 மணி) அணிகள் மோதுகின்றன. மகளிர் பிரிவில் நடக்கும் காலிறுதி ஆட்டங்களில் கர்நாடகா-தமிழ்நாடு (காலை 6 மணி), ஒடிசா -கேரளா (காலை 8 மணி), இமாசல பிரதேசம்- அரியானா (பிற்பகல் 2 மணி), பஞ்சாப்- மராட்டியம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

1 More update


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.