அமித் சாத்விக் அதிரடி… கோவைக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் அணி வெற்றி

நெல்லை,

டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. திருப்பூர் அணியின் பந்துவீச்சாளரான இசக்கிமுத்து சிறப்பாக பந்துவீசி கோவை அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். அந்த அழுத்தத்திலிருந்து கோவை அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை. அந்த அணியில் 3 வீரர்கள் மட்டுமே 20 ரன்களை தாண்டினர். கேப்டன் ஷாருக்கான் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பாலசுப்பிரமணியம் சச்சின் 24 ரன்கள் அடித்தார். திருப்பூர் தரப்பில் இசக்கிமுத்து 3 விக்கெட்டுகளும், சாய்கிஷோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திருப்பூர் அணி விளையாடியது.

தொடக்க ஆட்டகாரர்களாக அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய அமித் சாத்விக் கோவை அணியின் பந்துவீச்சை நாளா புறமும் விளாசினார். அவருடன் நிலைத்து நிற்காமல் மற்ற வீரரகள் சொற்ப ரன்களிலேயே தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் திருப்பூர் அணி 16.5 ஓவரில் 3 மட்டுமே இழந்து 140 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி அசத்தல் வெற்றி வெற்றது. அமித் சாத்விக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்களுடன் களத்தில் இருந்தார். கோவை அணி சார்பில் புவனேஸ்வரன், திவாகர், சுப்ரமணியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.