இந்தியாவுடனான அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடியபோது அவர் இவ்வாறு தெரிவித்ததாக பாகிஸ்தான் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான […]
