Srikanth: "சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்று இல்லை…" – விஜய் ஆண்டனி சொல்வது என்ன?

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர்  நடிப்பில், ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘மார்கன்’.

இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த்

அந்த வகையில் நேற்று (ஜூன் 24) மதுரையில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது அவரிடம் நடிகர் ஶ்ரீகாந்த்தின் போதைப்பொருள் வழக்கு தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்று இல்லை. நீண்ட காலமாகவே இருக்கிறது.

புகை பிடிப்பதும் போதைப் பழக்கம்தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைப்பொருள் பழக்கம். நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார். உண்மை என்னவென்று தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.