எனக்காக செலவழிக்கும் பணத்துக்கு, கணக்கு பார்க்கிறாய்! – அப்பாவின் புலம்பல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அன்பு மகனுக்கு,

நம் வீட்டின் உரிமையை உன் பெயருக்கு மாற்றிக் கொடுத்ததின் நோக்கமே, மரணம் எப்போது வேண்டுமானாலும் என்னை தழுவலாம் என்ற முன்யோசனையில்தான். ஆனால் நீயோ, எனக்காக செலவழிக்கும் பணத்துக்கு, கணக்கு பார்க்கிறாய். மருத்துவ செலவுக்கு பணம் கேட்டால், தர மறுக்கிறாய்.

எனக்கு கிடைக்கும் முதியோர் உதவித் தொகை 2000-ல் எப்படி என்னால் மருந்து, மாத்திரைக்கு செலவிட முடியும் என்று, என்றாவது நீ யோசித்திருப்பாயா?

உனக்கும் முதுமை வந்தால்தான், என் நிலைமையை நீ உணர்வாய். உன் மகனை நான் ஏதாவது வேலையாக வெளியே அனுப்பவும் தடை போட்டு விட்டாய்.

‘வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்; ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’.

இந்த பாடலில் உள்ள உண்மையை நீ உணர்ந்தால் நல்லது. கடவுள் உன்னை நன்கு வைத்திருக்க வாழ்த்துகிறேன். என் காலம் முடிந்துவிட்டது; உன் காலம் தொடர்கிறது.

நன்றி.

அன்புடன்

உன் அப்பா

சி.பி.ராஜு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.