மேட்​டூர் அணையி​லிருந்து 20,000 கனஅடி நீர் திறப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடி​யாக அதிகரிக்கப்பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று மாலை 13,332 கனஅடி​யாக நீர்​வரத்து இருந்தது.

அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கனஅடியி​லிருந்து 20,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அணை நீர்​மட்​டம் நேற்று 112.71 அடி​யாக​வும், நீர் இருப்பு 82.31 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

அதேபோல், தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று மாலை விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி​யாக நீர்​வரத்து உள்ளது. கேரளா, கர்​நாடகா மாநிலங்​களில் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​து​வரும் தொடர் மழை​யால் கர்​நாட​கா​வில் உள்ள கபினி, கிருஷ்ண​ராஜ சாகர் அணை​களின் நீர்​மட்​டம் வேக​மாக உயர்ந்துவரு​கிறது.

இந்​நிலை​யில், அணை​களின் பாதுகாப்பு கருதி அணைகளின் உபரி நீர் காவிரி ஆற்​றில் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து அதி​கரித்துள்​ள​தாக நீர்​வளத் துறை அதிகாரி​கள் தெரி​வித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.