பும்ராவை மட்டும் நம்ப முடியாது… இந்திய அணியில் 'சிஎஸ்கே' பௌலர் – பக்கா பிளான் ரெடி!

India vs England Test: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 24ஆம் தேதி நிறைவடைந்தது. அதில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 

ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் (Anderson Tendulkar Trophy Series) இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ், ஓல்ட் டிராஃபோர்ட், ஓவல் மைதானங்களில் அடுத்தடுத்து போட்டி நடைபெற உள்ளது. 

India vs England Test: இந்திய அணி செய்த தவறுகள்

இந்நிலையில், இந்திய அணி (Team India) முதல் போட்டியில் செய்த தவறுகளை அடையாளம் கண்டு அவற்றை திருத்திக்கொண்டு தொடரில் ஆதிக்கம் செலுத்த முனைய வேண்டும். சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் பல இடங்களில் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் வேகப்பந்துவீச்சில் இருந்த அனுபவமின்மை, பின்வரிசை பேட்டர்களின் பங்களிப்பின்மை, மோசமான பீல்டிங் உள்ளிட்ட காரணங்களால் இங்கிலாந்து அணியிடம் (Team England) தோல்வியை தழுவ நேரிட்டது.

India vs England Test: இந்திய அணியில் வரும் மாற்றங்கள்

இந்தச் சூழலில், வரும் ஜூலை 2ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் (Edgbaston Test) இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, வேலைப்பளூ காரணமாக விளையாட மாட்டார் என தெரிகிறது. எனவே, அவருக்கு பதில் அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) விளையாடுவதும் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இதையடுத்து, 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெறுவார்களா, இந்திய அணி என்னென்ன மாற்றங்களை செய்யும் என எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. 

India vs England Test: கழட்டிவிடப்பட்ட ஹர்ஷித் ராணா

இது ஒருபுறம் இருக்க, இந்திய அணியின் ஸ்குவாடில் 19வது வீரராக சேர்க்கப்பட்ட ஹர்ஷித் ராணா (Harshit Rana) தற்போது ஸ்குவாடில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2வது டெஸ்ட் போட்டிக்காக பர்மிங்காம் புறப்பட்ட இந்திய அணியோடு அவர் புறப்படவில்லை என தகவல்கள் வெளியாகின. தற்போது பும்ரா (Jasprit Bumrah) உடன் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் ஆகியோர் உள்ளனர். ஷர்துல் தாக்கூர், நிதிஷ் குமார் ரெட்டி என வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களும் உள்ளனர்.

ஆரம்பத்தில் ஹர்ஷித் ராணாவை பேக்-அப் வேகப்பந்துவீச்சாளராக இங்கிலாந்திலேயே இருக்கவைத்தது பெரும் கேள்விகளை எழுப்பியது. இங்கிலாந்து லயன்ஸ் உடன் இந்தியா ஏ விளையாடிய அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் ஹர்ஷித் ராணா ஒரு போட்டியின் ஒரு இன்னிங்ஸில் மட்டும் பந்துவீசி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய ஹர்ஷித் ராணா பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. மொத்தமே 4 இன்னிங்ஸ்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே அவர் எடுத்திருந்தார். அதிலும் ஒரே இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை அவர் எடுத்தார். 2 இன்னிங்ஸ்களில் விக்கெட்டே எடுக்கவில்லை. 

India vs England Test: இந்திய அணியில் ‘சிஎஸ்கே’ பௌலர்

அப்படியிருக்க ஹர்ஷித் ராணாவை ஏன் கௌதம் கம்பீர் தேர்வு செய்தார் என்ற கேள்வி பலரிடத்திலும் இருந்தது. இங்கிலாந்து லயன்ஸ் உடனான போட்டியில் அன்சூல் கம்போஜ் (Anshul Kamboj) 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்திருந்தார். புதிய பந்தில் அவர் பந்துவீசுவது பலரையும் ஈர்த்தது. பும்ரா அல்லது அர்ஷ்தீப் உடன் புதிய பந்தில் வீச அன்சூல் கம்போஜ் சிறப்பான தேர்வாக இருப்பார் என கூறப்படுகிறது. ஜடேஜாவை தவிர எந்த சிஎஸ்கே வீரரும் அணியில் இல்லாத நிலையில், தற்போது அன்சூல் கம்போஜ் 3வது போட்டிக்கு முன் டெஸ்ட் ஸ்குவாடில் இடம்பெறுவார் என சிஎஸ்கே ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.