சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பது தொடர்பாக அரசு டெண்டர் கோரி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வரும்போது சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையை மேம்படுத்தும் வகையிலும், தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் […]
