விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி

மதுரை / திருப்புவனம்: சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்ற மடப்​புரம் கோயில் காவலரை தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிர​வா​தியா என்று உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதி​முக வழக்​கறிஞர்​கள் மாரீஸ்​கு​மார், ராஜ​ராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமி​நாதன் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆஜராகி, மடப்​புரம் காளி கோயில் காவலர் அஜித்​கு​மார் போலீஸ் காவலில் இறந்த விவ​காரம் தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரித்​து, உரிய உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும் என்ற கோரிக்​கையை முன்​வைத்​தனர்.

அப்​போது அவர்​கள், “மடப்​புரம் காளி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒரு​வரின் காரில் இருந்த நகைகள் திருடப்​பட்​ட​தாக திருப்​புவனம் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. இதன்​பேரில் கோயில் காவல​ரான அஜித்​கு​மாரை போலீ​ஸார் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்​றனர். அப்​போது அவரை போலீ​ஸார் கடுமை​யாகத் தாக்​கிய​தில், அவர் உயிரிழந்தார்.

இது​போன்ற சட்​ட​விரோத காவல் மரணங்​களை ஏற்க முடி​யாது. இது தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்​து, உரிய உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும்” என்​றனர். பின்​னர் நீதிப​தி​கள், “கடந்த 4 ஆண்​டு​களில் 24 காவல் மரணங்​கள் நிகழ்ந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. அஜித்​கு​மார் என்ன தீவிர​வா​தி​யா? ஆயுதம் ஏந்தி தாக்​கி​னால், தற்​காப்​புக்​காக போலீ​ஸார் தாக்​குதல் நடத்​து​வதை ஏற்​கலாம். அவ்​வாறு இல்​லாமல், சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட அவரை தாக்​கியது ஏன் எனத் தெரிய​வில்​லை. இவ்​விவ​காரம் தொடர்​பாக மனு தாக்​கல் செய்​தால், விசா​ரித்து உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்” என்​றனர்.

இதையடுத்​து, மடப்​புரம் கோயில் காவலர் உயி​ரிழப்பு வழக்கு தொடர்​பாக உரிய விசா​ரணை நடத்​த​வும், போலீ​ஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்​ய​வும் கோரி அதி​முக வழக்​கறிஞர் பிரிவு மாநில துணைச் செய​லா​ளர் மாரீஸ்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு இன்று விசா​ரணைக்கு வரு​கிறது.

குற்றவியல் நடுவர் விசாரணை: இதற்கிடையில், அஜித்​கு​மாரை போலீ​ஸார் தாக்​கிய​தாகக் கூறப்​பட்ட மடப்​புரம் கோயில் பகு​தி​யில் மாவட்ட உரிமை​யியல் மற்​றும் குற்​ற​வியல் நடு​வர் வெங்​கடேஷ்பிர​சாத் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டார். அப்​போது அங்​கிருந்த பெண்​கள், முறை​யாக விசா​ரணை நடத்த வேண்​டுமென அவரிடம் முறை​யிட்​டனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில், ராம​நாத​புரம் சரக டிஐஜி மூர்த்தி நேற்று ஆலோ​சனை நடத்​தினர். அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “பிரேதப் பரிசோதனை அறிக்​கை, குற்​ற​வியல் நடு​வர் விசா​ரணை அறிக்கை அடிப்​படை​யில் மேல்​நட​வடிக்கை எடுக்கப்படும்” என்​றார்.

சிபிஐ விசாரிக்க வேண்டும்: திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீ​ஸார் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்த அஜித்​கு​மாரின் குடும்​பத்​தினரைச் சந்​தித்து ஆறு​தல் கூறிய பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ரா​ஜா, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அஜித்​கு​மார் உயி​ரிழந்த சம்​பவத்​தில் 6 காவலர்​களைப் பணி​யிடை நீக்​கம் செய்​தது போதாது. அவர்​கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்​டும்.

அஜித்​கு​மார் குடும்​பத்​துக்கு நிவாரணம் கொடுக்​காதது ஏன்? சாத்​தான்​குளத்​தில் இரு​வரை போலீ​ஸார் அடித்​துக் கொன்​ற​போது கனி​மொழி, மு.க.ஸ்​டா​லின் அங்கு சென்​றனர். அஜித்​கு​மார் இந்து என்​ப​தால் இங்கு வரவில்​லை​யா? அதனால்​தான் நிவாரணம் தரவில்​லை​யா?

சிபிஐ விசா​ரணை நடத்​தி​னால்​தான் நியா​யம் கிடைக்​கும். மடி​யில் கனம் இல்லை என்​பதை நிரூபிக்க முதல்​வர் சிபிஐ விசா​ரணைக்​குப் பரிந்​துரை செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார். இதே​போல, அஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பாக தீவிர விசாரணை நடத்​தி, சம்​பந்​தப்​பட்ட போலீ​ஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டுமென தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், புதிய தமிழகம் கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி, ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்து உள்​ளிட்​டோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.