பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கோலாா் மாவட்டம் பங்காருேபட்டை தாலுகா நாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ் பாபு (வயது 33). இவர் கோலார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஹரீஷ் பாபுவும், அதே ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பல இடங்கள் ஜோடியாக சுற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஹரீஷ் பாபு, கடந்த சில தினங்களாக தனது காதலியான இளம்பெண்ணுடன் சரியாக பேசவில்லை என தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தியதாக தெரிகிறது.
ஆனால் ஹரீஷ் பாபு, தற்போது ஆஷாட மாதமாக (கன்னட ஆடி மாதம்) இருப்பதாலும், கிராமத்தில் புதிதாக வீடு கட்டுவதாகவும், வீடு கட்டி முடித்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த அந்த இளம்பெண், உடனடியாக திருமணம் செய்துகொள்ள ஹரீஷ் பாபுவை கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும் அந்த இளம்பெண், ஹரீஷ் பாபுவின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரையும் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளார்.
அவர்களும் ஆஷாட மாதமாக இருப்பதாக கூறியும் இளம்பெண் கேட்கவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி திருமணத்துக்கு ஹரீஷ் பாபுவும், அவரது குடும்பத்தினரும் சம்மதித்துள்ளனர். அதன்படி கோலாரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து இருவீட்டார் முன்னிலையில் இளம்பெண்ணுக்கும், ஹரீஷ் பாபுவுக்கும் பதிவு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் அனைவரும் வீடு திரும்பினர். ஹரீஷ் பாபு, தனது தாயை சொந்த ஊரில் விட்டுவிட்டு கோலாருக்கு திரும்பி வந்தார். இரவு 11 மணி அளவில் தான் வேலை பார்த்த அரசு ஆஸ்பத்திரிக்கு ஹரீஷ் பாபு வந்துள்ளார். அப்போது அவர் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு வைத்து தான் கொண்டு வந்திருந்த மதுபானத்தை ஹரீஷ் பாபு குடித்துள்ளார்.
பின்னா் காது, தொண்ைட பிரிவில் உள்ள அறைக்கு சென்ற அவர், அங்குள்ள ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் நேற்று காலை ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அப்போது ஜன்னல் கம்பியில் ஹரீஷ் பாபு தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி உடனடியாக கோலார் போலீசாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், ஹரீஷ் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்ததும் ஹரீஷ் பாபுவின் குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு ஹரீஷ் பாபுவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஹரீஷ் பாபுவின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் இரவே ஹரீஷ் பாபு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் கட்டாயப்படுத்தி பதிவு திருமணம் செய்ததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் தனது செல்போன் சிம்கார்டை உடைத்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோலார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.