மாலியில் தீவிரவாதிகள் கடத்திய 3 இந்தியர்களை மீட்க அரசு தீவிரம்

கஞ்சம்: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமின் (ஜேஎன்ஐஎம்) என்ற அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இது அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய அமைப்பு. இந்த அமைப்பின் தீவிரவாதிகள் மாலியில் ஐ.நா. அமைதிப் படை வீரர்கள், மாலி ராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டினரை குறிவைத்து செயல்படுகின்றனர்.

இந்​நிலை​யில் மேற்கு மாலி​யில் உள்ள காயெஸ் என்ற இடத்​தில் உள்ள சிமென்ட் தொழிற்​சாலை வளாகத்​துக்கு சென்ற தீவிர​வா​தி​கள் அங்​கிருந்த வெளி​நாட்டு தொழிலா​ளர்​கள் சிலரை கடத்​திச் சென்​றனர். இதில் 3 பேர் இந்​தி​யர்​கள் என தெரிய​வந்​துள்​ளது. அவர்​களில் ஒரு​வர் ஒடிசா மாநிலம் கஞ்​சம் மாவட்​டத்​தைச் சேர்ந்த வெங்​கட்​ராமன்​(28) என தெரிய​வந்​துள்​ளது. ப்ளூ ஸ்டார் நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் இவர், 6 மாத சிறப்பு பணிக்​காக மாலி​யில் உள்ள சிமென்ட் தொழிற்​சாலைக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளார்.

இந்த கடத்​தல் சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம், கடத்​தப்​பட்ட இந்​தி​யர்​களை மீட்க தேவை​யான நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளும்​படி மாலி அதி​காரி​களை கேட்​டுக்​ கொண்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.