எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற முடியாது: திருமாவளவன் விளக்கம்

சென்னை: விசிக தலை​வர் திரு​மாவளவன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விசிக​வில் தேர்​தல் பணி என்​பது எங்களது களப்​பணி​களில் ஒன்​று. அதுவே எங்​களது முதன்​மை​யான பணி அல்ல.

தேர்​தல் நெருங்கி வரும் சூழலில், தேர்​தல் பணி​களை தீவிரப்​படுத்​து​வோம். தற்​போது கட்​சி​யின் மறுசீரமைப்​புக்​கான பணி​களில் கவனம் செலுத்​தப்​பட்டு வரு​கிறது.

திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் மார்க்​சிஸ்ட், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இருக்​கின்​றன. இந்த கூட்​டணி மிக​வும் கட்​டுக்​கோப்​பாக, உறு​தி​யுடன் இருக்​கிறது. இக்​கூட்​டணி கட்​டுக்​கோப்​பாகவே தேர்​தலை சந்​தித்து வெற்​றி​பெறும்.

தேர்​தலின் போது அளிக்​கப்​படும் வாக்​குறு​தி​களை யாராக இருந்​தா​லும் 100-க்கு நூறு சதவீதம் நிறைவேற்ற முடி​யாது. திமுக ஆட்​சி​யில் பெரும்​பான்​மை​யான வாக்​குறு​தி​கள் நிறைவேற்​றப்​பட்​டிருக்​கின்​றன.

இது அனை​வரும் அறிந்த உண்​மை. ஆனாலும் சில முக்​கிய​மான கோரிக்​கைகள் நிறைவேற்​றப்பட வேண்​டும் என்​பது தவிர்க்க முடி​யாதது. மறுக்க முடி​யாதது. அந்​தவகை​யில் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று விசிக சார்​பில் முதல்​வருக்கு சுட்​டிக்​காட்​டி​யிருக்​கிறோம். தேர்​தலுக்கு முன்​பாக அதை நிறைவேற்​று​வார்​கள் என நம்​பு​கிறேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.