மதுரையிலேயே அரசு பணி வழங்க வேண்டும்: அஜித்குமாரின் சகோதரர் திடீர் ஆதங்கம்

மதுரை: அஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பான வழக்கு உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நேற்று நடைபெற்​றது. இதற்​காக வந்திருந்த அஜித்​கு​மாரின் சகோ​தரர் நவீன்​கு​மார், செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நகை திருட்டு புகார் தொடர்பாக எனது சகோதரர் அஜித்குமாரை மட்டுமின்றி, என்னையும் போலீஸார் கடுமையாக தாக்கினர். போலீஸாரின் தாக்குதலால் அஜித்குமார் உயிரிழந்த நிலையில், எனக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தமிழக அரசால் தற்போது எனக்கு காரைக்​குடி ஆவினில் வேலைவாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இது அரசு வேலை இல்​லை. மேலும், ஆவின் அலு​வல​கம் 80 கி.மீ. தொலை​வில் உள்ளது. எனவே, மதுரை​யிலேயே அரசுத் துறை​யில் பணி வழங்க வேண்​டும். வளர்ச்சியடை​யாத பகு​தி​யில் எங்​களுக்கு வீட்​டு மனை பட்டாவழங்​கப்​பட்​டுள்​ளது.

அதி​லும் எங்​களுக்கு திருப்தி இல்​லை. அஜித்​கு​மார் உயி​ரிழப்​பில் சம்​பந்​தப்​பட்ட காவல் துறை உயர் அதி​காரி​களுக்​கும் தக்க தண்டனை பெற்​றுத்தர வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார். முன்​ன​தாக, அஜித்​கு​மார் வழக்கு உயர் நீதி​மன்​றத்​தில் விசாரணைக்கு வந்​த​போது “நவீன்​கு​மாருக்கு வழங்​கப்​பட்ட ஆவின் பணி, அரசுப் பணி​யல்ல” என்று தெரிவிக்​கப்​பட்டது. அதற்கு நீதிப​தி​கள், “ஆவின் அரசின் கட்​டுப்​பாட்​டில் உள்ள நிறு​வனம்​தான்” என்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.