இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனான பொறுப்பேற்றுள்ள சுப்மன் கில், தனது அபாரமான ஆட்டத்தால் மட்டும் இல்லாமல், தனது சொத்து மதிப்பாலும் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார். 25 வயதே ஆன இளம் வீரர் கில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் 430 ரன்கள் குவித்து, ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும், சதமும் அடித்து உலக அரங்கில் புதிய சாதனை படைத்தார். இவரது சொத்து மதிப்பு, சுமார் 34 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அடுத்த தலைமுறை வீரர் என்று கருதப்படும் கில் கிரிக்கெட் மட்டுமல்லாமல், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் மூலமும் தனது வருமானத்தை பெருக்கி வருகிறார்.

சுப்மன் கில்லின் வருமானம்

சுப்மன் கில்லின் வருமானத்திற்கு முக்கிய ஆதாரங்களாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளன. BCCI-யின் A தர ஒப்பந்தத்தின் கீழ், கில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். மேலும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் மற்றும் T20 போட்டிக்கு 3 லட்சம் கட்டணமாக பெறுகிறார். IPLல், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கில், ஒரு சீசனுக்கு 16.5 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

விளம்பர ஒப்பந்தங்கள்

கில்லின் இளமை, கவர்ச்சி மற்றும் கிரிக்கெட் மைதானத்தில் அவரது சிறப்பான ஆட்டம் அவரை விளம்பர உலகில் மிகவும் விரும்பப்படும் நபராக மாற்றியுள்ளது. நைக், ஜேபிஎல், கிலெட், சிஇஏடி, டாட்டா கேப்பிட்டல், பாரத்பே மற்றும் மை11சர்க்கிள் உள்ளிட்ட பல பிராண்டுகளுடன் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஆண்டுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை கில் சம்பாதிக்கிறார். மேலும், ‘ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ திரைப்படத்தில் இந்திய ஸ்பைடர்-மேன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்ததன் மூலமும் அவர் கூடுதல் வருமானம் ஈட்டியுள்ளார்.

சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை

ஷுப்மன் கில் பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் 3.2 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர வீட்டை வைத்துள்ளார். அவரது கார் சேகரிப்பில் ரேஞ்ச் ரோவர் வேலர் (89 லட்சம் ரூபாய்), மெர்சிடிஸ்-பென்ஸ் E350 மற்றும் ஆனந்த் மஹிந்திராவால் பரிசாக வழங்கப்பட்ட மஹிந்திரா தார் ஆகியவை அடங்கும். 2018 ஆம் ஆண்டு U-19 உலகக் கோப்பையில் 372 ரன்கள் குவித்து, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கில், ‘பிளேயர் ஆஃப் தி டூர்னமென்ட்’ விருதை வென்றார். 2023-ல் ODI-யில் 2000 ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையையும் 23 வயதில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இங்கிலாந்துக்கு எதிரான தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் 269 மற்றும் 161 ரன்கள் அடித்து, ஒரே டெஸ்டில் இரட்டை சதமும், சதமும் அடித்த 9-வது வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

11 மில்லியனுக்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட கில், சமூக ஊடகங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ளார். இது அவரது விளம்பர ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இருப்பினும், X தளத்தில் பரவிய தகவல்களின்படி, கில் உள்ளிட்ட குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள், 450 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது அவரது நற்பெயருக்கு சவாலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.