'இவ்வளவு அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா?'- விசிக, கம்யூனிஸ்டுகளை விளாசும் எடப்பாடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!’ என்ற பெயரில் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இன்று சிதம்பரத்தில் நடந்த பிரசாரத்தில் பேசியவர் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

அவர் பேசியதாவது, ‘திமுக-வின் ஆட்சியை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அற்புதமான ஆட்சி என விதந்தோதியிருக்கிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்களே உஷாராக இருங்கள். உங்களுக்கு சீட்டை எல்லாம் குறைத்து விடுவார்கள். நீங்கள் வேறு எங்கு செல்ல முடியும்? 4 ஆண்டுகளாக இந்த நாட்டிலே நடக்கிற அக்கிரமங்களை தட்டிக் கேட்க கூட்டணிக் கட்சிகளுக்கு வக்கில்லை.

கூட்டணி கட்சிகளுக்கே ஸ்டாலின் வேட்டு வைக்கிறார். விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் மாநாட்டிற்கு அனுமதி இல்லை. திருச்சியில் விசிக-வின் மாநாட்டுக்கு அனுமதி இல்லை. விசிக-வால் கொடிக்கம்பம் நட முடியவில்லை. இவ்வளவு அசிங்கப்பட்டா நீங்கள் அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்? அதிமுக-வை பொறுத்தவரை கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

இன்றைய சூழலில் எல்லா கட்சிகளும் கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன. திமுக-வும் பாஜக-வோடு கூட்டணி வைத்திருக்கிறது. 1999 இல் அவர்களின் கூட்டணியில்தான் அமைச்சரவையிலெல்லாம் இடம்பெற்றிருந்தார்கள். இன்றைக்கு நாம் பாஜக-வுடன் கூட்டணி வைத்தவுடன் நம்மை பார்த்து திமுக-வினர் பயப்படுகின்றனர்.’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.