பாகிஸ்தான்: டயர் வெடித்ததில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 9 பேர் பலி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இன்று காலை 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ் எம்-2 மோட்டார் பாதை வழியாகசென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் ஒரு டயர் வெடித்தது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் காயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டயர் வெடித்து பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.