நிதாரி கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த 2006-ல் உ.பி.​யின் நொய்​டா​வில் 31-வது செக்​டார் குடிசைப் பகு​தி​யில் ஏழைக் குடும்​பங்​களின் குழந்​தைகள் தொடர்ந்து காணா​மல் போயினர். அக்​டோபர் 2006-ல் பாயல் எனும் இளம்​பெண் காணா​மல் போய் வழக்கு பதி​வானது. பாயலின் கைப்​பேசி ஒரு ரிக் ஷா ஓட்​டுநரிடம் இருந்து போலீ​ஸாரிடம் சிக்​கியது.

பிறகு இதனை அவருக்கு வழங்​கிய 31-வது செக்​டார் டி-5 பங்​களா​வின் பணி​யாளர் சுரேந்​தர் கோலி போலீ​ஸாரிடம் சிக்​கி​னார். விசா​ரணைக்கு பிறகு டி-5 பங்​களா வளாகத்​தி​லும் அதன் முன்​புள்ள கால்​வா​யிலும் டிசம்​பர் 2006-ல் தோண்​டப்​பட்​டது. இதனுள் ஒன்றன்​பின் ஒன்​றாக சடலங்​கள், எலும்​புக்​கூடு​கள், 26 மண்டை ஓடு​களும் வெளி​யாகி நாட்​டையே உலுக்​கின.

இதன் காரண​மாக பங்​களா உரிமை​யாளர் மொஹீந்​தர் சிங் புந்​தேர் மீதும் புகார் எழுந்​தது. குழந்​தைகள், பெண்​களை கொலை செய்​ததுடன், சில உறுப்​பு​களை கோலி உட்​கொண்​ட​தாக​வும் விசா​ரணை​யில் தகவல் வெளி​யானது. இரு​வரும் கைது செய்யப்பட்டு 10 பெண்​கள் மற்​றும் 19 குழந்​தைகள் கொலை​யான​தாக வழக்​கு​கள் பதி​வாகின.

வழக்​கு​களின் விசா​ரணை​யில் டி-5 பங்​களா​வின் பெரும்​பாலானப் பகு​தி​களை சிபிஐ உடைத்​துப் பார்த்​தது. குற்​ற​வாளி​களுக்கு பிரைன் மேப்​பிங், நார்​கோட்​டிக் உள்​ளிட்​டப் பலவகை விசா​ரணை​களை நடத்​தி​யது.

இதன் முடி​வில், பணி​யாளர் சுரேந்​தர் கோலி, ஒரு மனநோ​யாளி எனவும், அவர் குழந்​தைகளை கொன்று அந்த உடல்​களு​டன் தவறான உறவு கொண்​ட​தாக​வும் தெரிய​வந்​தது. இதற்கு கோலி​யின் உரிமை​யாளர் உடந்​தை​யாக இருந்​த​தாக​வும் சிபிஐ தெரிவித்தது. 6 வழக்​கு​கள் மொஹீந்​தர் சிங் மீதும், 13 வழக்​கு​கள் கோலி மீதும் பதி​வாகின.

இரு​வர் மீதான வழக்​கு​கள் காஜி​யா​பாத் சிபிஐ நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றன. ஜுலை 2007-ல் வெளி​யான தீர்ப்​பில் இரு​வருக்​கும் மரண தண்​டனை விதிக்​கப்​பட்​டது. எனினும் மேல்​முறை​யீட்டு வழக்​கில் உ.பி.​யின் அலகா​பாத் உயர் நீதி​மன்​றம் அக்​டோபர் 2023-ல் இரு​வரை​யும் விடு​தலை செய்​தது. இவர்​கள் மீதான குற்​றச்​சாட்​டு​களை நிரூபிக்க, போது​மான ஆதா​ரங்​கள் இல்லை என நீதிபதி​கள் கூறி​யிருந்​தனர்.

இது தொடர்​பான சிபிஐ மற்​றும் உ.பி. அரசின் மேல்​முறை​யீட்டு மனுக்​களை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்வு தள்​ளு​படி செய்​துள்​ளது. இதனால் மொஹீந்​தர் சிங் புந்​தேர் அனைத்து வழக்​கு​களில் இருந்​தும் முழு​மை​யாக விடுவிக்​கப்​பட்​டார். சுரேந்​திர கோலி, மற்​றொரு வழக்​கில் இன்​னும் சிறை​யில் உள்​ளார்.

இந்த வழக்​கில் சிபிஐ, உ.பி. போலீ​ஸாரின் புலனாய்வுகள் குறித்​தும் நீதி​மன்​றம் கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளது. நிதாரி பங்களாவில் கண்​டெடுக்​கப்​பட்ட எலும்​புக்​கூடு​கள் தொடர்​பான குற்​ற​வாளி யார் என்​பது கேள்​வி​யாகி உள்​ளது. பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​கள் பெரும் ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.