சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக நாளை முதல் சென்னையில் மின்சார ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். அப்போது, பேருந்துகளை மின்னேற்றம் செய்வதற்கான கட்டுமானப் பணிகள், பராமரிப்புக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.47.50 கோடியில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையையும் அவர் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பெரும்பாக்கம் […]
