சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஆடம் வால்டன் அதிர்ச்சி தோல்வி
சின்சினாட்டி,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆடம் வால்டன் (ஆஸ்திரேலியா) – செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய ஜிரி லெஹெக்கா 7-6 (7-5), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஆடம் வால்டனை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆடம் வால்டன் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.
Related Tags :