ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 அறிமுகம்: சிறிய குற்றங்களுக்கு தண்டனையை ரத்து செய்ய விதிகளில் திருத்தம்

புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு ஜன் விஷ்​வாஸ் மசோதா நாடாளு​மன்​றத்​தின் 2 அவை​களி​லும் தாக்​கல் செய்​யப்​பட்டு நிறைவேற்​றப்​பட்​டது.

இந்​நிலை​யில் பல்​வேறு திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு ஜன் விஷ்​வாஸ் மசோதா 2.0 நேற்று மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் மசோ​தாவை தாக்​கல் செய்து பேசி​னார்.

இந்த மசோதா தற்​போதுள்ள சட்​டங்​களில் மிகச் சிறிய குற்​றங்​களுக்கு தண்​டனை விதிக்​கும் 288 விதி​களை நீக்​கு​வதற்கு வழி​வகை செய்​கிறது. நேற்று மசோதா அறி​முகம் செய்​யப்​பட்​ட​போது, மக்​களவை​யில் எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தம் உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​கள் குறித்து கோஷம் எழுப்​பினர். எதிர்க்​கட்சி உறுப்​பினர்​களின் பலத்த கோஷத்​துக்கு இடையே மசோ​தாவை, மத்​திய அமைச்​சர் பியூஷ்கோயல் தாக்​கல் செய்​தார்.

மசோதா அறி​முகம் செய்​யப்​பட்டதை தொடர்ந்து இந்த மசோ​தாவை மக்​களவை​யின் தேர்​வுக் குழு​வுக்கு அனுப்ப முடிவு செய்​யப்​பட்​டது. மோட்​டார் வாக​னச் சட்​டம் 1988, புதுடெல்லி நகரசபை கவுன்​சில் சட்​டம் 1994, சாலை போக்​கு​வரத்​துக் கழக சட்​டம் 1950 உள்​ளிட்ட சட்​டங்​களில் உள்ள பல்​வேறு ஷரத்​துகளை நீக்க இந்த மசோதா வழி​வகை செய்​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.