ஐபிஎல் தொடரில் அணிகளுக்குள் சர்ச்சைகள், விரிசல் நிகழ்வுகள் தற்போது சாதாரணமாக மாறிவிட்டன. அதோடு கடந்த காலங்களில் மும்பை அணியில் ஏற்பட்ட கடும் குழப்பங்கள், கேப்டன்கள் மாற்றம் போன்ற பிரச்னைகள் இன்று மறநினைவாக உள்ளன. குறிப்பாக ரோகித் சர்மா நீக்கம் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது அதிரடியான சம்பவமாகும்.
Add Zee News as a Preferred Source
இப்போது 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிர்ச்சி பரவியுள்ளது. அணி வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிந்து, கேப்டன் இடத்திற்கு விரோத மனோபாவம் கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோரின் இடையே தலைமை பதவி தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ராகுல் டிராவிட் அந்த அணியை விட்டு விலகி விட்டார் எனவும் கூறப்படுகின்றன.
சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு போக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், சிஎஸ்கே தரப்பில் இதற்காக இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெற்றுவரவில்லை என்பதும் அறியப்பட்டுள்ளது. இதையடுத்து, 23 வயது ஜெய்ஸ்வால் தான் சிஎஸ்கே அணியில் சேர வாய்ப்பு அதிகம் என அறியப்படுகிறது.
ஜெய்ஸ்வால், இதுவரை 67 ஐபிஎல் போட்டிகளுக்கு விளையாடியுள்ளார். அவர் 2167 ரன்ன்கள் சாதித்து, சராசரியில் 34 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 152 வரை உயர்ந்துள்ளது. இரு சதமும், 15 அரை சதம்களும் அடித்துள்ளார். கடந்த ஆறு சீசன்களாக ராஜஸ்தான் அணியின் முக்கிய பேட்டராக விளங்கிய ஜெய்ஸ்வால் தற்போது சிஎஸ்கே அணியில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை அவருக்கு கேப்டன் பதவிக்கு ஆர்வம் மற்றும் அணியை விட்டு வெளியேறுவதாகத் தெரிவித்துள்ள நிலையில், அவர் மினி ஏலத்தில் பங்கேற்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் ஏலத்தில் அவரை பெறுவதற்காக சிஎஸ்கே கடுமையாக முயற்சி செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சிஎஸ்கே அணியில் குறிப்பாக தொடக்க பேட்டிங்கிற்கான இடம் பிரச்சனையில் இருப்பதால், ஜெய்ஸ்வாலை கொண்டுவர முயற்சி அதிகரிக்கும் என எதிரபார்க்கப்படுகிறது. ஒருவேளை ஜெய்ஸ்வாலை சிஎஸ்கே அணி வாங்கினால், ஆயுஸ் மாத்ரே உடனான அவரது தொடக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய பலமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
About the Author
R Balaji