தன்னை கடித்ததால் ஆத்திரம்: நாகப்​பாம்பின் தலையை கடித்த போதை ஆசாமிக்கு சிகிச்சை

திருப்பதி: தன்னை கடித்த பாம்​பின் தலையை கடித்த போதை ஆசாமி ஒரு​வர் தற்​போது தீவிர மருத்​துவ சிகிச்​சை​யில் உள்​ளார். ஆந்​திர மாநிலத்​தின் திருப்​பதி மாவட்​டம், தொட்​டம்​பேடு மண்​டலம் சிய்​யா​வரம் கிராமத்​தில் கங்​கை​யம்​மன் கோயில் திரு​விழா நடை​பெற்​றது.

இதையொட்​டி, இதே கிராமத்தை சேர்ந்த வெங்​கடேஷ் (48) என்​பவர் இரவில் மது அருந்​து​விட்டு தள்​ளாடிய​வாறு வீட்​டுக்கு சென்​று​கொண்​டிருந்​தார். வழி​யில் ஒரு நாகப்​பாம்பு அவரின் காலை கடித்து விட்​டது. இதில் ஆத்​திரம் அடைந்த வெங்​கடேஷ், “என்​னையே கடிக்​கிறாயா ?” என கேட்டு அந்​தப் பாம்பை பிடித்​துள்​ளார்.

பிறகு குடி போதை​யில் அந்த பாம்​பின் தலையை கடித்து துப்​பி​யுள்​ளார். மேலும் இறந்த பாம்​பின் உடலுடன் வீட்​டுக்கு சென்ற அவர் தூங்கி விட்​டார். அதி​காலை​யில் வெங்​கடேஷ் மயங்​கிய நிலை​யில் இருப்​ப​தை​யும் அரு​கில் பாம்​பின் உடல் கிடப்​ப​தை​யும் கண்டு குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர். இதையடுத்து வெங்​கடேஷக்கு திருப்​பதி ருய்யா அரசு மருத்​து​வ​மனையில் தீவிர சிகிச்​சை அளிக்​கப்பட்​டு வரு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.