வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்.. கருண் நாயர் நீக்கம்.. காரணத்தை விளக்கிய அஜித் அகர்கர்!

இந்தியா அடுத்த சுற்றாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. இந்த போட்டிகள் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெற உள்ளன. இந்த சூழலில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுப்மன் கில் அணியின் தலைவர் ஆக உள்ளார் மற்றும் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் கருண் நாயர் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு எதிர்பாராததாக உள்ளது.

Add Zee News as a Preferred Source

கருண் நாயர் 2016ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கான போட்டியில் சேவாக்கிற்கு பிறகு முச்சதம் அடித்து சாதனை படைத்தார். ஆனால் சீனியர் வீரர்களின் வரவேற்பால் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெற முடியவில்லை. வாய்ப்புகள் கிடைத்த போது பெரிய ரன்களுடன் அசத்தியதும் இல்லை. இதனால், அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆனாலும் மனம் மடியாமல் உள்ளூர் மட்டத்தில் சிறப்பாக விளையாடிய நாயர், இங்கிலாந்தின் கவுண்டி தொடரிலும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அசத்தினார். இதன் பேரில் 8 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் தன் திறனை காட்டும் வாய்ப்பை பெற்றார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைத்தது.

4 டெஸ்ட் போட்டிகளில் நாயர் 205 ரன்கள் 25.63 சராசரியை அடைந்தார். இது போதுமானதாக இல்லாததால், அவருக்கான இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. 8 வருடம் கழித்து கருண் நாயர் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி களமிறக்கியது. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாததால், தேர்வுக்குழு கருண் நாயரை அணியில் இருந்து நீக்கி உள்ளது. பேக்-அப் வீரராக கடந்த வாரம் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக அரையிரட்டை அடித்த தேவ்தூத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நிலையில், கருண் நாயரை அணியில் எடுக்காதது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். “நாங்கள் கருண் நாயரிடம் அதிகமாக எதிர்பார்த்தோம். தேவ்தூத் படிக்கல் இன்னும் அதிகம் அசத்துவார் என நம்புகிறோம். ஒவ்வொருவருக்கும் 15 முதல் 20 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்க விரும்புகிறோம். ஆனால் அது எப்போதும் கிடைக்காது. கடந்த ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடித்த படிக்கல், 2024 இங்கிலாந்து தொடரில் தரம்சாலாவில் அரைசதம் அடித்ததில் இந்தியாவுக்காக நல்ல தரத்தை காண்பித்தார். இதன்படி அவரை அடுத்தடுத்த போட்டிகளில் தேர்ந்தெடுக்க முடியும். நாயரிடம் இங்கிலாந்து தொடரில் அதிகம் எதிர்பார்த்தோம்,” என்று தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு எதிரான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விகீ), என். ஜெகதீசன் (விகீ), நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.