நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருகிறது தவெக: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை

சென்னை: ‘கரூர் சம்​பவம், விபத்​து​போல தெரிய​வில்​லை. திட்​ட​மிட்ட சதி​போலவே தெரி​கிறது. எனவே, சிபிஐ அல்​லது சிறப்பு புல​னாய்வு குழு​வைக் கொண்டு உரிய முறை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும்’ என்று உயர் நீதி​மன்ற விடு​முறைக் கால நீதிப​தி​யிடம் தவெக​வினர் முறை​யிட்டனர். உயர் நீதி​மன்​றத்​துக்கு தற்​போது தசரா விடு​முறை என்​ப​தால், விடு​முறைக்கால நீதிப​தி​யான தண்​ட​பாணியை சென்னை ராஜா அண்​ணா​மலைபுரம் பசுமைவழிச் சாலை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் தவெக வழக்​கறிஞர் அணி​யினர் நேற்று சந்​தித்​தனர். அப்​போது, நீதிப​தி​யிடம் தவெக வழக்​கறிஞர் அறிவழகன், … Read more

வரலாறு படைத்த மிக்​-21 போர் விமானங்களுக்கு ஓய்வு: பிரியாவிடை நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பெருமிதம்

சண்​டிகர்: இந்தியா – ரஷ்யா இடையே நில​வும் நீண்ட கால உறவுக்கு ஓய்வு பெறும் மிக்​-21 போர் விமானங்​களே சாட்​சி​யாக உள்ளன என பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பெரு​மிதத்​துடன் கூறி​னார். ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை அமெரிக்கா விமர்​சித்​து, இந்​தியா மீது 50 சதவீத வரி​வி​தித்​தது. இந்​நிலை​யில் விமானப்​படை​யில் கடந்த 1960-ம் ஆண்டு இணைந்து 60 ஆண்​டு​களுக்கு மேல் பணி​யாற்​றிய மிக்​-21 போர் விமானங்​களுக்கு பிரி​யா​விடை அளிக்​கும் நிகழ்ச்சி சண்​டிகரில் நேற்று நடை​பெற்​றது. இதில் … Read more

சத்தீஷ்கார்: 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப்படையினர் அதிரடி

ராய்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் ஒடிசா மாநில எல்லையில் உள்ள சிந்த்காடக் கிராமத்துக்கு அருகே வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் … Read more

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்கார் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, சிறப்பாக விளையாடிய பர்கான் … Read more

துருப்பிடித்து வரும் நிலவு; எல்லாவற்றிற்கும் காரணம்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

பீஜிங், சீனாவின் மக்காவ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழுவினர் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஆழ்ந்த தொடர்பை பற்றி அவர்கள் புரிந்து கொள்ள உதவியது. அதுபற்றி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிலவுக்கு கெட்ட நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. நிலவின் மேற்பரப்பில், அதிலும் துருவ பகுதிகளில் ஹெமடைட் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது ஒரு வகையான இரும்பு ஆக்சைடு ஆகும். நிலவு … Read more

விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெறவில்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரத்​தின்​போது கல்​வீச்சு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்லை என ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் கூறி​னார். கரூர் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று ஆட்​சி​யர் மீ.தங்​கவேல், ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், மின்​வாரிய தலை​மைப் பொறி​யாளர் ராஜலட்​சுமி ஆகியோர் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தனர். அப்​போது, ஆட்​சி​யர் மீ.தங்​கவேல் கூறும்​போது, “கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 39 பேரும் சடல​மாகத்​தான் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு கொண்டு வரப்​பட்​டனர். மயங்கி விழுந்​தவர்​களில் ஒரு​வர் உயி​ரிழந்​த​தால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை 40-ஆக உயர்ந்​துள்​ளது. தற்​போது 80 … Read more

திருப்பதி | சிறையில் இருந்தபடியே 7 பட்டங்கள் பெற்ற கைதி

திருப்​பதி: திருப்பதி மாவட்​டம், ஏர்​பேடு மண்​டலம், செங்​காலபல்லி எனும் கிராமத்தை சேர்ந்​தவர் ஜி. யுகந்​தர் (33). இவர் கடந்த 2010-ம் ஆண்​டில் இண்​டர்​மீடியட் (பிளஸ் 2) படித்துக் கொண்​டிருந்​த​போது, ஒரு சிறு​வனை கடத்தி கொலை செய்த வழக்​கில் அவருக்கு ஆயுள் தண்​டனை வழங்​கப்​பட்​டது. இதனை தொடர்ந்து யுகந்​தர், கடப்பா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். சிறை​ அதி​காரி​களின் உதவியுடன், ஹைத​ரா​பாத்​தில் உள்ள பி.ஆர். அம்​பேத்கர் தொலை​தூர கல்வி பல்​கலைக்​கழகத்​தில் படித்து அடுத்​தடுத்து 4 பட்​டப் படிப்​பு​களை அவர் நிறைவு … Read more

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

திஸ்பூர், அசாமின் உடல்குரி பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 10.37 மணியளவில் ரிக்டர் அளவில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.73 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.29 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. அசாமில் அடிக்கடி … Read more

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ, பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) – ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் வுகிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1 … Read more