கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக தவெக நிர்​வாகிக்கு ஜாமீன் வழங்க நீதி​மன்​றம் மறுத்துவிட்டது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் விஜய் பங்​கேற்க தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், நிர்​வாகி பவுன்​ராஜ் ஆகியோரை கடந்த செப். 29-ம் தேதி கரூர் போலீ​ஸார் கைது செய்​து, சிறை​யில் அடைத்​தனர். மேலும், பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செய​லா​ளர் நிர்​மல்​ கு​மார் ஆகியோரைப் பிடிக்க தனிப்​படை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், நிர்​வாகி பவுன்​ராஜ் ஜாமீன் கேட்டு கரூர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. மனுவை விசா​ரித்த மாவட்ட அமர்வு நீதிபதி இளவழகன், “வழக்கு விசா​ரணை ஆரம்ப நிலை​யில் உள்​ள​தால், ஜாமீன் மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டார்.

விரை​வில் விஜய் வரு​வார்​: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை தவெக கொள்கை பரப்​புச் செய​லா​ள​ரும், முன்​னாள் ஐஆர்​எஸ் அதி​காரி​யு​மான அருண்​ராஜ் கடந்த 2 நாட்​களாக சந்​தித்து ஆறு​தல் கூறி​னார். அப்​போது அவர் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருடன் விஜய்யை பேச​வைத்​தார். இந்​நிலை​யில், கரூரில் அவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கரூரில் பாதிக்​கப்​பட்ட 33 குடும்​பத்​தினருடன் தலை​வர் விஜய் வீடியோ​கால் மூலம் பேசி ஆறு​தல் தெரி​வித்​துள்​ளார்.

அப்​போது அவர்​களிடம் “தைரிய​மாக இருங்​கள், விரை​வில் நேரில் வந்து சந்​திக்​கிறேன்” என கூறி​னார். அவர் கரூர் வரு​வதற்கு அனு​ம​தி​யும், பாது​காப்​பும் கேட்டு டிஜிபி அலு​வல​கத்​தில் மனு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக அரசு எடுக்​கும் நடவடிக்​கைகள் தொடர்​பாக கருத்​து​கூற விரும்​ப​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

சிறப்பு புல​னாய்​வுக் குழு… கரூர் சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்க்​குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இக்​ குழு​வினர் கடந்த 5-ம் தேதி முதல் கரூரில் முகாமிட்டு விசா​ரணை நடத்தி வருகின்​றனர். இந்​நிலை​யில், கரூரைச் சேர்ந்த உள்​ளூர் தொலைக்​காட்சி உரிமை​யாளர்​கள் 7 பேர் குழு முன் நேற்று விசா​ரணைக்கு ஆஜராகினர்.

அவர்​களிடம் “சம்​பவம் நடந்​த​போது நீங்​கள் எங்கு இருந்​தீர்​கள்? விஜய் எப்​போது வந்​தார்? தவெக சார்​பில் விளம்​பரம் அளிக்​கப்​பட்​ட​தா?” என்பன உள்​ளிட்ட கேள்வி​களை அதிகாரிகள் கேட்​டு, தகவல்​களை சேகரித்​தனர். மேலும், சிலரின் செல்​போன்​களை வாங்கி விபத்து நடந்த நேரத்​தில் யாரிட​மிருந்து அழைப்பு வந்​தது, யாரை அழைத்​துள்​ளார்​கள் என பரிசோதித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.