புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 1925-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் 100-வது ஆண்டு தினம் கடந்த அக்.1-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘சிறப்பு நாணயத்தைப் பெறுவதற்கு https://indiagovtmint.in/hi/product-category/kolkata-mint என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்யலாம்’’ என்று கூறியுள்ளார்.