டெல்லியில் ஆப்கன் அமைச்சர் கூட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்லி: ஆப்​கானிஸ்​தான் வெளி​யுறவு அமைச்​சர் அமீர் கான் முத்​தாகி கடந்த வியாழக்​கிழமை டெல்​லிக்கு வந்​தார். ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்​தானில் தலி​பான்​கள் ஆட்​சிக்கு வந்​த​திலிருந்து அவர் இந்​தி​யா​வுக்கு முதல் முறை​யாக வந்​துள்​ளார்.

தனது 7 நாள் இந்​தி​யப் பயணத்​தின் இரண்​டாவது நாளில் அவர் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கரை​ சந்​தித்​து இருதரப்பு வர்த்​தகம், மனி​தாபி​மான உதவி மற்​றும் பாது​காப்பு ஒத்​துழைப்பு குறித்து விவா​தித்​தார்.

பின்​னர் அவர் டெல்​லி​யில் ஒரு செய்​தி​யாளர் சந்​திப்பை நடத்​தி​யது சர்ச்​சை​யாகி உள்​ளது. அதில், டெல்​லி​யின் பெண் பத்​திரி​கை​யாளர்​கள் கலந்து கொள்ள தடை விதிக்​கப்​பட்​டது. தலி​பான் பெண்​களுக்​காக இந்​தி​யா​வின் பெண் பத்​திரி​கை​யாளர்​கள் அக்​கூட்​டத்​தில் கேள்வி எழுப்​பும் வாய்ப்​பும் இல்​லாமல் போய் உள்​ளது. பெண் பத்​திரி​கை​யாளர்​களுக்கு தடை விதித்​தது தொடர்​பாக சமூக வலைதளங்​களில் கண்​டனங்​கள் பதி​வாகின. இதே கருத்தை முன்​னாள் மத்​திய நிதி​யமைச்​சர் ப.சிதம்​பர​மும் தன் எக்ஸ் தளத்​தில் பதிவு செய்​துள்​ளார். முக்​கிய​மான இந்த சந்​திப்​பில் பெண் பத்​திரி​கை​யாளர்​கள் இல்​லாதது தலி​பான் ஆட்​சி​யின் கீழ் பெண்​களின் அவலநிலையை எடுத்​துக் காட்​டு​வ​தாக​வும் கருத்​துகள் பதி​வாகி உள்​ளன.

கடந்த ஆகஸ்ட் 2021-ல் தலி​பான்​கள் மீண்​டும் ஆட்​சிக்கு வந்த பிறகு ஆப்​கானிஸ்​தானில் பெண்​களின் நிலைமை மிக​வும் மோச​மாகி விட்​ட​தாகக் கருதப்​படு​கிறது. இதை, சர்​வ​தேச சமூக​மும் மனித உரிமை அமைப்​பு​களும் அந்​நாட்​டின் மீது ‘பாலின இனவெறி’ என்று முத்​திரை குத்​தி​யுள்​ளனர். கடந்த மாதம், ஆப்​கானிஸ்​தானில் ஒரே வாரத்​தில் மூன்று நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில், 2,200 க்கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். மேலும், ஆயிரக்​கணக்​கானோர் காயமடைந்​தனர். ஆண் மீட்​புப் பணி​யாளர்​கள் பெண்​களைத் தொட்​டுத் தூக்கி உதவுவதற்கு தலி​பான்கள் தடை விதித்​தனர்.

இதன் காரண​மாக, ஆப்​கானிஸ்​தானின் நிலநடுக்​கப் பேரழி​வில் பெண்​கள் பாதிப்பு அதி​கரித்​தது. பெண் மீட்​புப் பணி​யாளர்​கள் வரும் வரை பாதிக்​கப்​பட்ட பெண்​கள் காத்​திருக்​கும் நிலைக்கு தள்​ளப்​பட்​டனர். இது​போல், பெண்​கள் மீதான கட்​டுப்​பாடு​களை தலி​பான்​கள் ஆட்​சிக்கு வந்​தது முதல் தொடர்​கின்​றனர். பெண்​களின் கல்வி மற்​றும் வேலை​யில் கட்​டுப்​பாடு​கள் காரண​மாக அவர்​கள் எண்​ணிக்கை குறை​வாகவே உள்​ளது. இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடைவிதித்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.