தேசிய ஜனநாயக கூட்டணியில் சுமுக உடன்பாடு: பிஹார் பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு முடிந்தது

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்​டி, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​படி ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யூ), பாஜக தலா 101 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நவம்​பர் 6, 11-ம் தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயககூட்​ட​ணிக்​கும் (என்​டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கியமெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது.

பிஹாரில் மொத்​தம் 243 தொகு​தி​கள் உள்ள நிலை​யில், என்​டிஏ கூட்​ட​ணி​யின் தொகு​திப் பங்​கீடு குறித்த உயர்​நிலை ஆலோ​சனை கூட்​டம் டெல்​லி​யில் நேற்று பல்​வேறு கட்​ட​மாக நடை​பெற்​றது. முதல்​கட்​ட​மாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வீட்​டில் நடந்த கூட்​டத்​தில் பாஜக மூத்த தலை​வர்​கள், ஐக்​கிய ஜனதா தள மூத்த தலை​வர்​கள் சஞ்​சய் ஜா, லல்​லன் சிங் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். பின்​னர், பாஜக தேசிய தலை​வர் நட்​டா​வின் வீட்​டில் பாஜக உயர்​நிலை தலை​வர்​கள் ஆலோ​சனை நடத்​தினர். இதன்​பிறகு, பாஜக தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி, மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங், நட்​டா, தர்​மேந்​திர பிர​தான், பிஹார் துணை முதல்​வர் சாம்​ராட் சவுத்ரி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இந்த கூட்​டத்​தில் என்​டிஏ கூட்​ட​ணி​யின் தொகு​திப் பங்​கீடு இறுதி செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி என்​டிஏ கூட்​ட​ணி​யின் தொகு​திப் பங்​கீட்​டில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டுள்​ளது. இதன்​படி, பாஜக 101, ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யூ) 101, லோக் ஜனசக்தி – ராம்வி​லாஸ் (எல்​ஜேபி-ஆர்) 29 , ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்​எல்​எம்) 6 , இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா (எச்​ஏஎம்) 6 தொகு​தி​களில் போட்​டி​யிட உள்​ளன. கூட்​ட​ணி​யின் அனைத்து தலை​வர்​களும், தொண்​டர்​களும் தொகு​திப் பங்​கீட்டை முழு​மனதுடன் வரவேற்​றுள்​ளனர். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

பிஹார் முன்​னாள் முதல்​வரும், எச்​ஏஎம் கட்சி தலை​வரு​மான ஜிதன்​ராம் மாஞ்சி அதிருப்தி அடைந்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகின. அவர் தனது வலை​தளப் பதி​வில், ‘எனது கடைசி மூச்சு உள்​ளவரை பிரதமர் மோடி​யுடன் இருப்​பேன்’ என்று கூறி​யுள்​ளார். ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்​எல்​எம்) கட்சி கடந்த தேர்​தலில் 99 தொகு​தி​களில் தனித்​துப் போட்​டி​யிட்​டும், எந்த தொகு​தி​யிலும் வெற்றி பெற​வில்​லை. அந்த கட்சி தற்​போது என்​டிஏ கூட்​ட​ணி​யில் இணைந்​து, வெற்றி வாய்ப்​புள்ள 6 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது.

மெகா கூட்​ட​ணி​யில் குழப்​பம்: இதற்​கிடையே, மெகா கூட்​ட​ணி​யின் தொகு​திப் பங்​கீட்​டில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி), காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இடையே தொடர்ந்து குழப்​பம் நீடிக்​கிறது. காங்​கிரஸின் உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே,மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​தாக தகவல் வெளி​யானது. தேர்​தல் வியூக நிபுணர் பிர​சாந்த் கிஷோர் கடந்த 2024 அக்​டோபர் 2-ம் தேதி ஜன் சுராஜ் கட்​சியை தொடங்​கி​னார். இந்த கட்சி தற்​போது தனித்​துப் போட்​டி​யிடு​கிறது. ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய​வை​யும் தனித்​துப் போட்​டி​யிடு​கின்​றன. ஏஐஎம்​ஐஎம், பகுஜன் சமாஜ் ஆகியவை தலா 100 தொகு​தி​களில் வேட்​பாளர்​களை நிறுத்த உள்​ளன. ஆம் ஆத்மி மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களி​லும் போட்​டி​யிட உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.