கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை: கரூர் விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட்ட உச்ச நீதி​மன்ற தீர்ப்​புக்கு அரசி​யல் தலை​வர்​கள் வரவேற்​பும், எதிர்ப்​பும் தெரி​வித்​துள்​ளனர்.

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கரூர் சம்​பவத்​தில் தங்​கள் மீது எந்​த​விதத் தவறும் இல்லை என்​பதை நிறுவ, எதிர்​தரப்​பினரைக் குற்​ற​வாளிக் கூண்​டில் நிறுத்தி தங்​கள் இஷ்டத்​துக்​குக் கட்​டுக்​கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்​துக்​குப் பின்​னால் ஏதோவொரு அரு​வருப்​பான அரசி​யல் காரணம் ஒளிந்​துள்​ளது என்ற மக்​களின் சந்​தேகத்​துக்​குக் கூடிய விரை​வில் விடை கிடைக்​கப்​போகிறது.

மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன்: திமுக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் சரி​யான சவுக்​கடி கொடுத்​துள்​ளது. உச்ச நீதி​மன்ற உத்​தரவு வரவேற்​கத்​தக்​கது. இதன்​மூலம் கரூர் சம்​பவத்​தில் உண்மை விரை​வில் வெளிவரும். சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் நீதி​யின் முன் நிறுத்​தப்​படு​வர் என்ற நம்​பிக்கை ஏற்​பட்​டுள்​ளது.

பாமக தலை​வர் அன்​புமணி: இந்த வழக்​கில் சிபிஐ விசா​ரணை கோரிய முதல் கட்சி பாமக​தான். இதன் முலம் இந்த விவ​காரத்​தில் புதைந்து கிடக்​கும் அனைத்து உண்​மை​களும் வெளிக்​கொண்டு வரப்​படும் என்று பாமக நம்​பு​கிறது.

பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை: உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பு திரா​விட மாடல் அரசின் மீது நம்​பிக்​கை​யின்​மையை வெளிப்​படுத்தி இருக்​கிறது. கிரிமினல் ஆட்​சிக்கு தலை​யில் குட்டு வைத்​திருக்​கிறது உச்ச நீதி​மன்​றம்.இதேபோல், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், புதிய தமிழகம் கட்சி தலை​வர் கிருஷ்ண​சாமி, வி.கே சசிகலா ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.

விசிக எம்​.பி. ரவிக்​கு​மார்: விஜய் தரப்​பின் மனு மீது உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வைத் தொடர்ந்​து, பாஜக​வின் பிடி​யில் விஜய் சிக்​கிக்​கொண்​டு​விட்​டார் என பலர் பதி​விட்டு வரு​கின்​றனர். பாஜக சொன்​ன​தால்​தான் விஜய், கட்சி தொடங்​கி​னார் என நாங்​கள் சொல்லி வரு​கிறோம். மகா​ராஷ்டிரா மாடலில் தமிழகத்​தி​லும் அதி​காரத்​தைப் பிடிப்​பது என்​பது​தான் பாஜக​வின் திட்​டம். அதற்​காகக் களமிறக்​கப்​பட்​டிருப்​பவர்​தான்​ ​விஜய்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.