மருத்துவ மாணவி நள்ளிரவில் வெளியில் வந்தது எப்படி? – முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வியால் சர்ச்சை

கொல்கத்தா: ‘‘​பாலியல் வன்​கொடுமைக்கு ஆளான மருத்​துவ மாண​வி, நள்​ளிரவு 12.30 மணிக்கு வெளி​யில் வந்​தது எப்​படி?’’ என்று மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி எழுப்​பிய கேள்வி சர்ச்​சைக்கு உள்​ளாகி உள்​ளது.

மேற்கு வங்க மாநிலம் துர்​காபூரில் உள்ள தனி​யார் மருத்​துவ கல்​லூரி​யில், ஒடி​சாவைச் சேர்ந்த மாணவி (23) ஒரு​வர் 2-ம் ஆண்டு எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை தனது ஆண் நண்​பருடன் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30-க்கு கல்​லூரி விடு​திக்கு திரும்​பி​னார். அப்​போது ஒரு கும்​பல் மருத்​துவ மாண​வியை பாலியல் வன்​கொடுமை செய்து தப்​பியது. ஆண் நண்​பரும் அங்​கிருந்து தப்​பிச் சென்​று​விட்​டார்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்​வர் மம்தா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: துர்​காபூரில் மருத்​துவ மாணவிக்கு நடந்த பாலியல் வன்​கொடுமை மிக​வும் அதிர்ச்சி அளிக்​கிறது. இது​போன்ற செயல்​களை எந்​தக் காரணத்​துக்​காக​வும் ஏற்​றுக் கொள்ள முடி​யாது. இதுதொடர்​பாக போலீ​ஸார் 3 பேரை கைது செய்​துள்​ளனர். மற்​றவர்​களை தேடி வரு​கின்​றனர். அதே​நேரத்​தில் நள்​ளிரவு 12.30 மணிக்கு கல்​லூரி வளாகத்தை விட்டு 23 வயது பெண் எப்​படி வெளி​யில் வந்​தார். இதற்கு யார் பொறுப்​பு?

குற்​ற​வாளி​கள் யாராக இருந்​தா​லும் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். அவர்​களுக்கு தண்​டனை பெற்று தரப்​படும். இந்த நேரத்​தில் தனி​யார் கல்​லூரி​கள், தங்​கள் வளாகத்​தில் பாது​காப்பை பலப்​படுத்த வேண்​டும். ‘இரவு நேர கலாச்​சா​ரத்​துக்​கு’ முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்று கேட்​டுக் கொள்​கிறேன். இவ்​வாறு மம்தா பானர்ஜி கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து பாஜக செய்​தித் தொடர்​பாளர் கவுரவ் பாட்​டியா தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘பாலியல் வன்​கொடுமை வழக்​கில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்​ப​தற்கு பதில், பாதிக்​கப்​பட்ட பெண் மீதே முதல்​வர் மம்தா குற்​றம் சாட்​டு​கிறார். சந்​தேஷ்​காலி​யில் மருத்​துவ மாணவி பலாத்​காரம் செய்​யப்​பட்​டார். இப்​போது அதே​போல் ஒரு கொடூரம் அரங்​கேறியுள்​ளது’’ என்​று தெரிவித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.