​கா​சா​வில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி

ஜெருசலேம்: ​கா​சா​வில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர்.

இஸ்​ரேல் ராணுவம் – பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை ஆட்சி செய்த ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது. இதையடுத்து காசா​வில் 10-ம் தேதி போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது.

எகிப்​தில் நடை​பெற்ற அமைதி மாநாட்​டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்​னிலை​யில் இந்த காசா அமைதி ஒப்​பந்​தம் உறு​தி​யானது. முன்​ன​தாக, ஹமாஸ் குழு​வின் பிடி​யில் இருந்த 20 இஸ்​ரேலிய பிணைக் கைதி​கள் விடு​தலை செய்​யப்​பட்​டனர். அதே​போல் இஸ்​ரேல் சிறை​களில் அடைக்​கப்​பட்​டிருந்த 154 பாலஸ்​தீனர்​களும் விடுவிக்​கப்​பட்​டனர்.

பிணைக் கைதி​கள் விடுவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து இஸ்​ரேல் நாட்​டைச் சேர்ந்த அவி​நாட்​டன் ஓர் என்​பவரும் விடுவிக்​கப்​பட்​டார். இவர் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் பிடித்து வைத்​திருந்த 20 இஸ்​ரேலியர்​களில் ஒரு​வர் ஆவார்.

சுமார் 738 நாட்​கள் பிணைக் கைதி​யாக இருந்த இவர் நேற்று முன்​தினம் வீடு வந்து சேர்ந்​தார். அவரைப் பார்த்​ததும் அவரது மனைவி நோவா அர்​காமனி ஓடி வந்து கட்​டியணைத்​துக் கொண்​டார். கணவரை முத்​தமிட்டு வரவேற்​றார். சந்​தோஷத்​தில் அவர் வாய்​விட்டு அழு​தார்.

மனை​வியைப் பார்த்​ததும் கண்​ணீர் விட்டு அழு​தார் அவி​நாட்​டன் ஓர். அவி​நாட்​டனின் மனைவி நோவா அர்​காமனி​யும், பிைணக் கைதி​யாக பிடித்து வைக்​கப்​பட்​டிருந்​தார். இஸ்​ரேல் ராணுவத்​தினர் கடந்த ஆண்டு மேற்​கொண்ட முயற்​சி​யால் அவர் விடுவிக்​கப்​பட்​டார். 2 ஆண்​டு​களுக்​கும் மேலான பிரிவுக்​குப் பின்​னர் தம்​ப​தி​யர் ஒன்று சேர்ந்​ததற்கு நண்​பர்​கள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளனர்.

இரு​வரும் கட்​டியணைத்து வரவேற்ற வீடியோ, புகைப்​படங்​கள் தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளன. தனது மனை​வி​யின் கன்​னத்​தில் அவி​நாட்​டன் ஓர், முத்​தமிடும் புகைப்​படத்தை இஸ்​ரேல் நாட்டு பாது​காப்​புப் படை​யினர் (ஐடிஎஃப்) சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டுள்​ளனர். இதுகுறித்து நோவா அர்​காமனி கூறும்​போது, “2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி நடை​பெற்ற இசைத் திரு​விழா​வின்​போது​தான் ஹமாஸின் தாக்​குதல் நடந்​தது. அந்த பயங்​கர இரவுப் பொழுதை மறக்​கவே முடி​யாது. அந்த இரவில் கணவர் என்ன ஆனார்? கடத்​தப்​பட்​டா​ரா, கொலை செய்​யப்​பட்​டா​ரா என்​பதே தெரிய​வில்​லை.

எனது கணவரை 2 ஆண்​டுக்கு பிறகு பார்த்​தேன். இப்​போது இணைந்​திருப்​பது மகிழ்ச்​சி​யாக உள்ளது” என்​றார். 245 நாட்​கள் பிணைக் கைதி​யாக இருந்​தவர் நோவா அர்காமனி என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.