முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஊடுருவல் காரணம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தான், வங்​கதேசத்​தில் இருந்து ஊடுரு​வல் நடை​பெறு​வ​தால், இந்​தி​யா​வில் முஸ்​லிம்​கள் மக்​கள் தொகை அதி​கரித்​துள்​ளது’’ என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா கூறி​யுள்​ளார்.

டெல்​லி​யில் ‘தைனிக் ஜாக்​ரன்’ இந்தி செய்​தித் தாள் ஏற்​பாடு செய்த நிகழ்ச்​சி​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்று பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் பல்​வேறு மதத்​தவர்​களின் மக்​கள்​தொகை​யில் ஏற்​றத்​தாழ்வு நில​வு​கிறது. இதற்கு பாகிஸ்​தான், வங்​கதேசம் போன்ற நாடு​களில் இருந்து இந்​தி​யா​வுக்​குள் ஊடுரு​வல் நடப்​பதே காரணம். இதனால் இந்​திய நாட்​டின் கலாச்​சா​ரம், ஜனநாயக நெறி​முறை​களுக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டுள்​ளது. அப்​படி ஊடுருவி வருபவர்​களை கண்​டறிந்து அப்​புறப்​படுத்த வேண்​டும், அவர்​களை மீண்​டும் நாடு கடத்த வேண்​டும்.

தற்​போது முஸ்​லிம்​களின் மக்​கள் தொகை 24.6 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. அதே​நேரத்​தில் இந்​துக்​களின் மக்​கள்​தொகை 4.5 சதவீதம் சரிந்​துள்​ளது. இதற்கு காரணம் இந்​துக்​களிடம் குழந்தை பிறப்பு சரிந்​துள்​ளது என்று கூற முடி​யாது. பாகிஸ்​தான், வங்​கதேசத்​தில் இருந்து இந்​தி​யா​வுக்​குள் ஊடுருவி உள்​ளவர்​களால் ஏற்​பட்​டுள்ள மாற்​றம். இதனால் என்​னென்ன பின்​விளைவு​கள் ஏற்​படும் என்​பதை நாட்டு மக்​கள் புரிந்து கொள்ள வேண்​டும்.

நமது சுதந்​திரம், மொழி, கலாச்​சா​ரம் ஆகிய இந்த மூன்​றை​யும் ஒவ்​வொரு இந்​தி​யரும் புரிந்து கொள்​ளா​விட்​டால், இந்​தி​யா​வின் பாது​காப்பை உறு​திப்​படுத்த முடி​யாது.

ஆனால், பாகிஸ்​தான், வங்​கதேசத்​தில் இந்​துக்​களின் மக்​கள்​தொகை குறைந்​துள்​ளது. குஜ​ராத், ராஜஸ்​தான் போன்ற எல்லை மாநிலங்​களில் தீவிர கண்​காணிப்பு போடப்​பட்​டுள்​ளது.

ஊடுரு​வல் அந்த மாநிலங்​களில் தடுக்​கப்​பட்டு வரு​கிறது. ஆனால், இந்​தி​யா​வுக்​குள் ஊடுரு​வும் மையமாக மேற்கு வங்​கம் தொடர்ந்து நீடிக்​கிறது. ஊடுரு​வல்​கார்​களை கண்​டு​பிடித்து நடவடிக்கை எடுக்​கத்​தான் குடி​யுரிமை திருத்த சட்​டம் (சிஏஏ) கொண்டு வரப்​பட்​டது. அகதி​களாக வருபவர்​களுக்​கும் ஊடுரு​வல்​காரர்​களுக்​கும் வித்​தி​யாசம் உள்​ளது.

ஊடுரு​வல்​காரர்​கள் இந்​திய வாக்​காளர் பட்​டியலிலும் இடம்​பெறுகின்​றனர். ஊடுரு​வல்​காரர்​களுக்கு நீங்​கள் ஆதரவு அளித்​தால், இந்​திய அரசி​யலமைப்பு சட்​டங்​களை நீங்​கள் அசுத்​தப்​படுத்​துகிறீர்​கள் என்று அர்த்​தம். ஊடுரு​வல்​காரர்​களை கண்​டு​பிடித்து மத்​தி​ய அரசு ஒழிக்​கும்​. இவ்​வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்​ ஷா பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.