ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 6 மாதம் சிறை தண்டனை

சென்னை: தீ​பாவளிப் பண்​டிகை நெருங்​கும் நிலை​யில், ரயி​லில் பட்​டாசு எடுத்​துச் சென்​றால், 6 மாதம் சிறைத் தண்​டனை விதிக்​கப்​படும் என்று ரயில்வே நிர்​வாகம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. தீபாவளிப் பண்​டிகை வரும் 20-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. பண்​டிகையை ஒட்டி சொந்த ஊர்​களுக்கு செல்​லும்​போது, பேருந்​து, ரயில்​களில் பட்​டாசுகளை எடுத்​துச் செல்ல முயற்சி செய்​வார்​கள். குறிப்​பாக, ரயில்​களில் பட்​டாசுகள் எடுத்​துச் செல்​வதைத் தடுக்க ஆர்​பிஎஃப் போலீ​ஸார் தீவிர சோதனை​யில் ஈடு​படு​வது வழக்​கம்.

அந்த வகை​யில், தீபாவளிப் பண்​டிகையை ஒட்​டி, ரயி​லில் பட்​டாசுகளை எடுத்​துச்​செல்​வதை தடுக்க தீவிர சோதனை விரை​வில் தொடங்க உள்​ளது. ரயி​லில் பட்​டாசு எடுத்​துச்​செல்​வது கண்​டு​பிடிக்​கப்​பட்​டால், கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று ஆர்​பிஎஃப் போலீ​ஸார் எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து, ஆர்​பிஎஃப் அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில்​களில் பட்​டாசு உள்​ளிட்ட தீவிபத்து ஏற்​படுத்​தும் பொருட்​களை கொண்டு செல்​லத் தடை உள்​ளது. சிலர் பண்​டிகைக் காலங்​களில் விதி​முறை​களை மீறி பட்​டாசு போன்ற பொருட்​களை எடுத்து வரு​கின்​றனர். இதனால் பயணி​களின் பாது​காப்பு கேள்விக்​குறி​யாகிறது.

எனவே தடையை மீறி பட்​டாசு கொண்டு செல்​பவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். முதல் முறை​யாகப் பிடிபட்​டால் ரூ.1,000 அபராதம் அல்​லது 6 மாதங்​கள் சிறைத் தண்​டனை வழங்​கப்​படும். தொடர்ந்து விதி​மீறல்​களில் ஈடு​பட்​டால் 3 ஆண்​டு​கள் வரை​யில் சிறைத் தண்​டனை அல்​லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்​கப்​படும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.