ஊழல் வழக்கில் லாலு, மனைவி, மகன் மீது குற்றச்சாட்டு பதிவு: பிஹார் தேர்தலுக்கு முன் லாலு குடும்பத்துக்கு பின்னடைவு

புதுடெல்லி: ராஷ்ட்​ரிய ஜனதா தளத்​தின் (ஆர்​ஜேடி) நிறு​வனர் லாலு, அவரது மனைவி மற்​றும் மகன் மீது ஊழல் வழக்​கில் டெல்லி நீதி​மன்​றத்​தில் நேற்று குற்​றச்​சாட்டு பதிவு செய்​யப்​பட்​டது. பிஹார் தேர்​தலுக்கு முன் லாலு மற்​றும் அவரது குடும்​பத்​துக்கு இது பெரும் பின்​னடை​வாக கருதப்​படு​கிறது.

ஆர்​ஜேடி நிறு​வனர் லாலு பிர​சாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்​ச​ராக இருந்​த​போது இரு ஐஆர்​சிடிசி ஓட்​டல்​களை பராமரிப்​ப​தற்​கான ஒப்​பந்​தம் சுஜாதா ஓட்​டலுக்கு வழங்​கப்​பட்​டது.

இந்த ஒப்​பந்​தத்​திற்கு ஈடாக பினாமி நிறு​வனம் மூலம் 3 ஏக்​கர் நிலத்தை லாலு பெற்​ற​தாக சிபிஐ குற்​றம் சாட்​டி​யுள்​ளது. இந்த வழக்​கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது டெல்லி சிறப்பு நீதி​மன்​றம் நேற்று குற்​றச்​சாட்​டு​களை பதிவு செய்​தது.

அப்​போது தாங்​கள் குற்​றமற்​றர்​கள் எனவும் விசா​ரணையை எதிர்​கொள்ள தயார் என்​றும் லாலு மற்​றும் அவரது குடும்​பத்​தினர் தெரி​வித்​தனர்.

இவர்​களுக்கு எதி​ராக குற்​றச்​சாட்​டு​களை பதிவு செய்ய போது​மான ஆதா​ரங்​கள் இருப்​ப​தாக நீதி​மன்​றத்​தில் சிபிஐ தெரி​வித்​தது. ஆனால் குற்​றச்​சாட்​டு​களை பதிவு செய்ய எந்த ஆதா​ர​மும் இல்லை என்​றும் டெண்​டர்​கள் நியாய​மாக வழங்​கப்​பட்​ட​தாக​வும் லாலு​வின் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் நிலத்​துக்கு ஈடாக ஓட்​டல் பராமரிப்பு ஒப்​பந்​தம் வழங்​கு​வ​தில் குற்​றம் சாட்​டப்​பட்ட மற்​றவர்​களு​டன் சேர்ந்து லாலு சதி செய்​ததும் அதி​காரத்தை தவறாக பயன்​படுத்​தி​யதும் முதற்​கட்ட விசா​ரணை முடிவு​களில் தெரிய வரு​வ​தாக நீதி​மன்​றம் குறிப்​பிட்​டது.

பிஹாரில் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் நடை​பெறும் தேர்​தலுக்கு ஆர்​ஜேடி தயா​ராகி வரு​கிறது. கட்​சி​யின் முதல்​வர் முக​மாக தேஜஸ்வி யாதவ் கருதப்​படு​கிறார். இந்​நிலை​யில் இந்த வழக்​கில் குற்​றச்​சாட்டு பதிவு செய்​யப்​பட்​டிருப்​பது லாலு மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்​கு பெரும்​ பின்​னடைவாக கருதப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.