சென்னை: கரூர் சம்பவம் குறித்து இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதுடன், சபாநாயகரின் நடத்தைக்கு எதிராக, எடப்பாடி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுக – தவெக கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இன்றைய அமர்வில் கேள்வி நேரம் முடிந்ததும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான தீர்மானத்தின்மீது காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. […]