மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: மம்தா பானர்ஜிக்கு கிரண் ரிஜிஜு கண்டனம்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் துர்​காபூரில் மருத்​துவ மாணவி ஒரு​வரை ஒரு கும்​பல் பாலியல் வன்​கொடுமை செய்​து​விட்டு தப்பி ஓடியது.

இதுகுறித்து முதல்​வர் மம்தா பானர்ஜி நேற்று முன்​தினம் கூறும்​போது, “மருத்​துவ மாணவிக்கு நடந்த பாலியல் வன்​கொடுமை மிக​வும் அதிர்ச்சி அளிக்​கிறது. அதே​நேரம் நள்​ளிரவு 12.30 மணிக்கு அவர்​கள் கல்​லூரி வளாகத்தைவிட்டு எப்​படி வெளி​யில் சென்​றனர்” என்றார்.

இதுகுறித்து மத்​திய நாடாளுமன்ற விவ​காரத்துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று எக்ஸ் பக்கத்​தில், “பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட மாண​வியையே முதல்​வர் மம்தா குறை கூறி உள்​ளார். பாஜக முதல்​வர் ஒரு​வர் இப்​படி ஒரு கருத்தை தெரி​வித்​திருந்​தால், என்ன நடந்​திருக்​கும் என கற்​பனை செய்து பாருங்​கள். எதிர்க்​கட்​சி​யினர் நாடு முழு​வதும் போராட்​டத்​தில் குதித்​திருப்​பார்​கள். இந்த விவ​காரத்​தில் ஊடகங்கள் கூட மவுனம் காக்கின்றன” என பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.