சத்தீஸ்கரில் 77 நக்சலைட்கள் சரண்

சுக்மா: சத்​தீஸ்​கரில் நேற்று 42 பெண்​கள் உட்பட 77 நக்​சலைட்​கள் பாது​காப்​புப் படை​யினர் முன்​னிலை​யில் ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு சரணடைந்​தனர். நக்​சல் அபா​யம் உள்ள மாநிலங்​களில் அடுத்​தாண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் நக்​சலைட்​கள் ஒழிக்​கப்​படு​வர் என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா உறு​திபட தெரி​வித்​துள்​ளார். இதனால் பாது​காப்புப் படை​யினர் தீவிர தேடு​தல் வேட்டை நடத்தி வரு​கின்​றனர்.

இதையடுத்து நக்​சலைட்​கள் சரணடைவதும் அதி​கரித்து வரு​கிறது. மகா​ராஷ்டிரா மாநிலம் கட்​சிரோலி மாவட்​டத்​தில் நக்​சல் தலை​வர் சோனு சரண் தலை​மை​யில், 60 பேர் நேற்று முன்​தினம் சரணடைந்​தனர்.

இந்​நிலை​யில் சத்​தீஸ்​கர் மாநிலம் சுக்மா மாவட்​டத்​தில் 10 பெண்​கள் உட்பட 27 நக்​சலைட்​கள் சிஆர்​பிஎப் போலீஸ் அதி​காரி​கள் முன்பு நேற்று சரணடைந்​தனர். இவர்​களில் பலரது தலைக்கு ரூ.50 லட்​சம் வரை பரிசுகள் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்பிடத்தக்கது.

இதே​போல் சத்​தீஸ்​கரின் கான்​கெர் மாவட்​டத்​தில் நேற்று நக்​சல் கமாண்​டர் ராஜ்மன் மண்​டாவி தலை​மை​யில் 32 பெண்​கள் உட்பட 50 நக்​சலைட்​கள் எல்லை பாது​காப்புப் படை​யினர் முன்பு சரணடைந்​தனர். இந்​நிகழ்ச்​சி​யில் அவர்​கள் 39 ஆயுதங்​களை​யும் ஒப் படைத்​தனர். பிஜப்​பூர் மாவட்​டம் பாய்​ரம்​கர் பகு​தி​யில் இன்று காலை 120 நக்​சலைட்​கள் சரணடைவர் என எதிர்​பார்க்​கப்​படு​வ​தாக பாது​காப்புப் படை​யினர் தெரி​வித்​துள்​ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.