India vs Australia ODI, Aakash Chopra Playing XI Prediction: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் விளையாட உள்ளது. அதைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரிலும் விளையாடுகிறது.
Add Zee News as a Preferred Source
India vs Australia ODI: இந்திய அணி பயிற்சி
அந்த வகையில், இந்திய ஓடிஐ ஸ்குவாட் நேற்று காலை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. விமான தாமதமான சூழலில், இந்திய அணி வீரர்களும் தாமதமாகவே ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சென்று சேர்ந்தனர். இருப்பினும், இன்று இந்திய அணி வீரர்கள் பெர்த் மைதானத்தில் தங்களின் பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இன்னும் போட்டிக்கு இரண்டு நாள்களே இருப்பதால் விரைவாக சூழலுக்கு தகுந்தாற்போல் மாற வேண்டும் என்பதால் இந்திய அணி உடனடியாக பயிற்சியில் இறங்கியிருக்கிறது. வரும் அக். 19, அக். 23, அக். 25 ஆகிய தேதிகளில் மூன்று ஓடிஐ போட்டிகள் நடைபெற இருக்கின்றன. சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணியை, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி சந்திக்கிறது.
India vs Australia ODI: போட்டி அனல் பறக்கும்
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருப்பதாலும், அவர்கள் சர்வதேச போட்டிகளை நீண்ட நாள் கழித்து விளையாடுவதாலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹசில்வுட் போன்ற மூத்த ஆஸ்திரேலிய வீரர்களும் இருப்பதால் இரு அணிகளுக்கும் சரிசமமான மோதலை எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பையும் வெளியிட்டுள்ளார்.
India vs Australia ODI: ஆகாஷ் சோப்ராவின் பிளேயிங் லெவன் கணிப்பு
அவரது கணிப்பின்படி முதல் ஓடிஐ போட்டியில், சுப்மான் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓப்பனராக களமிறங்குவார்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு இருக்காது. நம்பர் 3 மற்றும் நம்பர் 4 இடத்திற்கு முறையே விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பார்கள். கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராகவும், 5வது இடத்திலும் விளையாடுவார்கள். காயமடைந்த ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டி விளையாடுவார். சுழற்பந்துவீச்சை பொருத்தவரை ஆல்-ரவுண்டர்களான அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் விளையாடுவார்கள்.
India vs Australia ODI: குல்தீப் யாதவிற்கு பதில்…
வேகப்பந்துவீச்சில் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இருப்பார்கள் என்றார். குல்தீப் யாதவ் முதல் ஓடிஐ போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவித்தார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் குல்தீப் யாதவ் விளையாட மாட்டார் என அவர் கூறுகிறார் எனலாம். பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரேல் ஆகியோரும் பேக்அப்பாக இருப்பார்கள். ஹர்ஷித் ராணாவை ஆல்-பார்மட் வீரராகவும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் கைக்கொடுப்பாரக கம்பீர் பார்ப்பதாக தெரிகிறது.
மேலும் படிக்க | இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்? வெல்லப்போவது யார்? எந்த வீரர் அதிக ரன் அடிப்பார்?
மேலும் படிக்க | இந்திய அணியை கேலி செய்த ஆஸ்திரேலியா! அதுவும் இப்படி செய்யலாமா?
மேலும் படிக்க | IND vs AUS: ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததும் ஓய்வை அறிவிக்கும் 4 வீரர்கள்!
About the Author
Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More