ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து பரிந்துரை வழங்க நீதிபதி தலைமையில் ஆணையம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்​தில் ஆணவப் படு​கொலைகளை தடுக்க உரிய சட்​டம் இயற்ற நடவடிக்கை எடுக்​கப்​படும். இதற்​கான பரிந்​துரைகளை அரசுக்கு வழங்க முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் ஆணை​யம் அமைக்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் நேற்று பேசி​ய​தாவது: திரா​விட மாடல் ஆட்​சியை நாங்​கள் நெஞ்சை நிமிர்த்தி நடத்தி வரு​கிறோம். அனைத்து சாதி​யினரை​யும் அர்ச்​சகர் ஆக்​கி​யுள்​ளோம். பெரி​யார், அம்​பேத்​கர் பிறந்​த​நாளில் இந்த நாடே உறு​தி​மொழி எடுக்​கிறது. சமூகநீ​தி, சமத்​து​வம், சகோ​தரத்​து​வம், பொது​வுடமை, பொது உரிமை, கல்வி உரிமை, அதி​கார உரிமை ஆகிய கொள்​கைகள்​தான் வேற்​றுமை, பகைமையை விரட்​டும். அதைத்​தான் நாங்​கள் செய்து வரு​கிறோம்.

இத்​தகைய சூழலில் நாட்​டில் நடை​பெறும் சில சம்​பவங்​கள் மனதை வேதனையடையச் செய்​கின்​றன. எதன் காரண​மாக​வும் ஒரு​வரை மற்​றவர் கொல்​வதை நாகரிக சமு​தா​யத்​தால் ஏற்க இயலாது. அவ்​வப்​போது ஏதேனும் ஒரு பகு​தி​யில் நடந்​து​விடும் இது​போன்ற துயர​மான சம்​பவம் நம் சமு​தா​யத்​தையே தலைகுனியச் செய்​கிறது. பெண்​கள் தங்​கள் எதிர்​கால வாழ்க்​கையை தாங்​களே தீர்​மானிக்​கும் உரிமை​யைப் பறிக்​கும் ஆணா​திக்​க​மும் இந்த குற்​றச் செயல்​களுக்​குப் பின்​னால் ஒளிந்​திருக்​கிறது.

இதற்கு ஒரு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும். ஆணவப் படு​கொலைகளை எப்​படி​யா​வது தடுக்க வேண்​டும் என்று உறுப்​பினர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

ஆணவப் படு​கொலைகளுக்கு எதி​ராக கடும் நடவடிக்கை எடுப்​ப​தோடு, சமு​தாய மாற்​றத்​தை​யும் ஏற்​படுத்​தி, அதன்​மூலம் இந்த அநீ​தியை தடுக்க வேண்​டும் என்​பது நம் அனை​வரது ஆதங்​க​மாக இருக்​கிறது.

ஆணவப் படு​கொலை தொடர்​பான வழக்​கு​கள் அனைத்​தி​லும் கடுமை​யான பிரிவு​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. ஆனால், இந்த படுகொலைகளுக்கு சாதி மட்​டுமின்​றி, இன்​னும் பல காரணங்​களும் உள்​ளன. எதன்​பொருட்டு நடந்​தா​லும், கொலை, கொலை​தான். அதற்​கான தண்​டனை​கள் மிகமிக கடுமை​யாகவே தரப்​படு​கின்​றன. சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வாளி​கள் மீது உடனடி​யாக குண்​டர் தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட கடுமை​யான சட்​டங்​களில் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

காவல் துறைக்கு உத்தரவு: யாரும், எதற்​காக​வும், செய்த குற்​றத்​தில் இருந்து தண்​டனை​யின்றி தப்​பி​விடக் கூடாது என்​பதை காவல் துறைக்கு
உத்​தர​வாக போட்​டுள்​ளோம். எனவே, சட்​டம் அதன் கடமை​யைச் செய்​கிறது.

அதே​நேரம், இந்த கொடூர​மான சிந்​தனைக்கு எதி​ரான விழிப்​புணர்வு பிரச்​சா​ரத்தை சமூக சீர்​திருத்த இயக்​கங்​கள் மட்​டுமின்​றி, அரசி​யல் இயக்​கங்​கள், பொதுநல அமைப்​பு​களும் செய்ய வேண்​டும் என்​பதே என் வேண்​டுகோள். சமு​தா​யத்​தில் சாதி வேற்​றுமை, ஆதிக்க மனப்​பான்​மைக்கு எதி​ராக அனை​வரும் பேச வேண்​டும். அனைத்​து​ வித​மான ஆதிக்க மனப்​பான்​மைக்​கும் முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும்.

இதுகுறித்து தேவை​யான பரிந்​துரைகளை அளிக்க உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் சட்ட வல்​லுநர்​கள், முற்​போக்கு சிந்​தனை​யாளர்​கள், மானுட​வியல் அறிஞர்​களைக் கொண்ட ஓர் ஆணை​யம் அமைக்​கப்​படும்.

அரசி​யல் இயக்​கங்​கள், ச‌‌ட்ட வல்​லுநர்​கள், சமூக செயற்​பாட்​டாளர்​கள், பாதிக்​கப்​பட்ட மக்​கள் என அனைத்து தரப்​பினரின் கருத்​துகளை​யும் பெற்று, இந்த பொருள் குறித்து உரிய பரிந்​துரைகளை ஆணை​யம் வழங்​கும். அதன் அடிப்​படை​யில், ஆணவப் படு​கொலைகளை தடுக்​கும் நோக்​கில் உரிய சட்​டம் இயற்​றத் தேவை​யான நடவடிக்​கைகளை தமிழக அரசு எடுக்​கும்​. இவ்​வாறு முதல்​வர்​ அறிவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.