புட்டபர்த்தி சத்யசாய் மருத்துவமனையில் இலவச ரோபோ இதய அறுவை சிகிச்சை!

புட்​டபர்த்தி: ஆந்​தி​ரா​வின் புட்​டபர்த்​தி​யில் செயல்​படும் சத்ய சாய் மருத்​து​வ​மனை​யில் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வசதி தொடங்​கப்​பட்டு உள்​ளது.

சத்​திய சாய்பாபா​வால் கடந்த 1991-ம் ஆண்டு நவம்​பர் 22-ம் தேதி ஆந்​தி​ரா​வின் புட்​டபர்த்​தி​யில் ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்​துவ அறி​வியல் கழகம் தொடங்​கப்​பட்​டது. அங்கு இதயம், சிறுநீரகம், எலும்​பியல், கதிரியக்​க​வியல், மயக்​க​வியல், கண் மருத்​து​வம், பிளாஸ்​டிக் சர்​ஜரி, ரத்த வங்கி உள்​ளிட்ட அனைத்து மருத்​துவ வசதி​களும் உள்​ளன. இந்த மருத்​துவ சேவை​கள் இலவச​மாக வழங்​கப்​படு​கின்றன.

இந்த சூழலில் ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்​துவ அறி​வியல் கழகத்​தின் இதய நோய் அறு​வைச் சிகிச்சை பிரி​வில் அண்​மை​யில் ரூ.8 கோடி​யில் ரோபோடிக் கருவி​கள் நிறு​வப்​பட்​டன. இதன்​மூலம் கடந்த 15-ம் தேதி ஒரு நோயாளிக்கு வெற்​றிகர​மாக இதய அறுவை சிகிச்சை மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதுதொடர்​பாக ஸ்ரீ சத்ய சாய் அறக்​கட்​டளை​யின் நிர்​வாக அறங்​காவலர் ரத்​னாகர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:
சத்​திய சாய் பாபா​ அருளால் சத்ய சாய் உயர் மருத்​துவ அறி​வியல் கழகத்​தின் இதய நோய் அறுவை சிகிச்சை பிரி​வில் அதிநவீன ரோபோடிக் கருவி​கள் பொருத்​தப்​பட்​டன. சுய​சார்பு இந்​தியா திட்​டத்​தின்​படி இந்த கருவி​கள் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்டு உள்​ளன. வெளி​நாடு​களை ஒப்​பிடும்​போது உற்​பத்தி செலவு மிக​வும் குறைவு.

புதிய ரோபோடிக் கருவி​கள் மூலம் மருத்​து​வர் சுதிர் ஸ்ரீவஸ்​தவா தலை​மையி​லான குழு ஒரு நோயாளிக்கு வெற்​றிகர​மாக இதய அறுவை சிகிச்​சை மேற்​கொள்ளப்பட்டு உள்​ளது. ரோபோடிக் கருவி தொழில்​நுட்​பம் காரண​மாக உலகின் எந்த மூலை​யில் இருந்​தும் சிறப்பு மருத்​து​வர்​கள், புட்​டபர்த்​தி​யில் உள்ள நோயாளிக்கு அறு​வைச் சிகிச்​சை செய்ய முடி​யும்.

ரஷ்யா மற்​றும் டெல்​லியை சேர்ந்த ரோபோடிக் அறு​வைச் சிகிச்சை நிபுணர்​கள் எங்​களுக்கு உறு​துணை​யாக இருந்​தனர். அவர்​களுக்கு நன்​றியை தெரி​வித்து கொள்​கிறேன். இவ்​வாறு ரத்​னாகர் தெரி​வித்​துள்​ளார்.

மருத்​து​வர் சுதிர் ஸ்ரீவஸ்​தவா தலை​மையி​லான எஸ்​எஸ் இன்​னோவேஷன்ஸ் நிறு​வனம், ரோபோடிக் அறு​வைச் சிகிச்சை கருவி​களை தயாரித்து ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்​துவ அறி​வியல் கழகத்​துக்கு வழங்கி உள்​ளது. சாய் பா​பா​வின் தீவிர பக்​த​ரான சுதிர் வஸ்​த​வா, ஹரி​யானா​வில் இருந்து புட்​டபர்த்​திக்கு நேரில் வந்​து முதல் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.