ஆக்டா எப்.எக்ஸ். நிறுவனத்தின் ரூ.5,000 கோடி மோசடி விவகாரம்: ரூ.2,385 கோடி கிரிப்டோ கரன்சி முடக்கம்

புதுடெல்​லி: ஆக்​டா எப்​.எக்​ஸ்​. என்​ற நிறுவனத்​​தின்​ ரூ.2,385 கோடி ம​திப்​புள்​ள கிரிப்​டோ கரன்​சியை அமலாக்​கத்​ துறை ​முடக்​கி உள்ளது.

ரஷ்​யாவை சேர்​ந்​த ​பாவல்​ புரோஜோரோவ்​ என்​பவர்​ கடந்​த 2011-ம்​ ஆண்​டில்​ ஆக்​டா எப்​.எக்​ஸ்​. என்​ற நிறுவனத்​தை தொடங்​கி​னார்​. இந்​த நிறுவனம்​ 150-க்​கும்​ மேற்​பட்​ட ​நாடுகளில்​ ‘போரக்​ஸ்​ டிரேடிங்​’ என்​ற அந்​நிய செலாவணி வர்​த்​தகத்​​தில்​ ஈடுபட்​டு வருகிறது.

கடந்​த 2019-ம்​ ஆண்​டில்​ இந்​​தி​யா​வில்​ ஆக்​டா எப்​.எக்​ஸ்​. ​கால்​ ப​தித்​தது. அப்​​போது ​முதல்​ ‘போரக்​ஸ்​ டிரேடிங்​’ மூலம்​ கோடிக்​கணக்​கில்​ மோசடி செய்ததாக தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

இதைத்​ தொடர்​ந்​து கடந்​த 2024-ம்​ ஆண்​டில்​ ஆக்​டா எப்​.எக்​ஸ்​. மற்​றும்​ அதனோடு தொடர்​புடைய நிறுவனங்​களில்​ அமலாக்​கத்​ துறை அ​தி​காரிகள்​ சோதனை நடத்​​தினர்​. கடந்​த ஜூன்​ 13-ம்​ தே​தி ​மும்​பை, டெல்​லி, சென்​னை, குருகி​ராம்​ உள்​ளிட்​ட நகரங்​களில்​ அமலாக்​கத்​ துறை சோதனை நடத்​​தியது.

இந்​த சூழலில்​ ஆக்​டா எப்​.எக்​ஸ்​. நிறுவனத்​​தின்​ ரூ.2,385 கோடி ம​திப்​புள்​ள கிரிப்​டோ கரன்​சியை அமலாக்​கத்​ துறை ​முடக்​கி உள்​ளது. இதுகுறித்​து அமலாக்​கத்​ துறை நேற்​று வெளியிட்​ட அறிக்​கை​யில்​ கூறி​யிருப்​ப​தாவது:

ஆக்​டா எப்​.எக்​ஸ்​. நிறுவனத்​​தின்​ மூளை​யாக செயல்​பட்​ட ​பாவல்​ புரோஜோரோவ்​, ஸ்​பெ​யினில்​ கைது செய்​யப்​பட்​டு உள்​ளார்​. ம​கா​ராஷ்டி​வின்​ புணே நகரில்​ ப​திவு செய்​யப்​பட்​ட வழக்​கின்​ அடிப்​படை​யில்​ அமலாக்​கத்​ துறை ​வி​சாரணையை தொடங்​கியது. ஆக்​டா எப்​.எக்​ஸ்​. நிறுவனம்​
கடந்​த 2019 ​முதல்​ 2024 வரை​யிலான ​காலத்​​தில்​ இந்​​தி​யா​வில்​ இருந்​து ரூ.5,000 கோடியை சட்​ட​விரோத​மாக வெளி​நாடுகளுக்​கு அனுப்​பி உள்​ளது.

போரக்​ஸ்​ டிரேடிங்​ என்​ற பெயரில்​ அறி​முக​மாகி ஆர்​பிஐ அனும​தி​யின்​றி கிரிப்​டோ கரன்​ஸி வர்​த்​தகத்​​திலும்​ இந்​த நிறுவனம்​ ஈடுபட்​டிருக்​கிறது. சிட்​பண்​ட்​ மோசடியை ​போன்​று இந்​​தி​யா​வில்​ மோசடி நடைபெற்​றிருக்​கிறது. ​முதலில்​ சிறிய தொகையை லாப​மாக வழங்​கி ​முதலீட்​டாளர்​
களின்​ நம்​பிக்கையை பெற்​றுள்​ளனர்​. பின்​னர்​​ பெரிய ​முதலீட்​டை பெற்​று ஏ​மாற்​றி உள்​ளனர்​.

ஆக்​டா எப்​.எக்​ஸ்​. நிறுவனத்​​தின்​ நிர்​வாகிகள்​, பிரிட்​டிஷ் வெர்​ஜின்​ ஐலேண்​ட்​, ஸ்​பெ​யின்​, எஸ்​டோனியோ, ஜார்​ஜி​யா, ஐக்​கிய அரபு அமீரகத்​​தின்​ து​பாய்​, சிங்​கப்​பூர்​ ஆகிய ​நாடுகளில்​ இருந்​து செயல்​பட்​டு உள்​ளனர்​. இந்​​திய ​முதலீட்​டாளர்​களை ஈர்​க்​க ரஷ்​யா மற்​றும்​ ஸ்​பெ​யின்​ ​நாடுகளில்​ இந்​​தியர்​களும்​ பணியமர்​த்​தப்​பட்​டு உள்​ளனர்​. ​யுபிஐ மற்​றும்​ வங்​கிகள்​ மூலம்​ பணப்​ பரி​மாற்​றம்​ நடைபெற்​றிருக்​கிறது.

ஆக்​டா எப்​.எக்​ஸ்​. நிறுவன மோசடி தொடர்​பாக அந்​த நிறுவனத்​​தின்​ ரூ.2,385 கோடி ம​திப்​புள்​ள கிரிப்​டோ கரன்​சி ​முடக்​கப்​பட்​டு உள்​ளது. இதை​யும்​ சேர்​த்​து இதுவரை ரூ.2,681 கோடி ம​திப்​புள்​ள சொத்​துகள்​ ​முடக்​கப்​பட்​டிருக்​கிறது. 54 பேர்​ மீது சட்​டரீ​தி​யாக நடவடிக்​கை எடுக்​கப்​பட்​டு வருகிறது. இவ்​வாறு அமலாக்​கத்​ துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.